தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
தமிழ்ப் பெயர் எதுவுமில்லா
தமிழ்ப் புத்தாண்டே வருக .
உன் பிறப்பிலும் சந்தேகம் ,
தையிலா , சித்திரையிலா .
பிறப்புச் சான்றிதழ் எப்போது கொடுத்து
என் ஐயப்பாட்டை தெளிவு படுத்துவாய் .
கொடுத்தாலும் சரியென்று யார் சான்றளிப்பார் .
அதுவரை சித்திரையில் உன்னைக் கொண்டாடுவேன்
எப்படியாகினும் , இப்படியோர் புத்தாண்டை
எப்போதும் நான் கண்டதில்லையே.
ஊர்கூடி மகிழ்வுடனே கொண்டாடுதல் இன்றி ,
ஊரடங்கில் அடைப்பாட்டால் கொண்டாட்டம் எங்ஙனம் .
விகாரி வருடம் போகிற போக்கில்
விகாரமாக முடிந்து செல்கிறதே.
சார்வரியிலாவது சரியாகவேண்டும் .
பார்முழுதும் பழையநிலை வரவேண்டும் .
போர்க்கால நடவடிக்கைகள் பலனளிக்க வேண்டும்.
கார்காலம்போல் மக்கள் மனங்குளிரவேண்டும்.
உழைப்போர்க்கு அதற்கேற்ப பலன் கிடைத்தல் வேண்டும்.
மாரியினால் விவசாயம் தழைத்தோங்க வேண்டும் .
பேரிடர்களில்லாமல் இங்கு பெருவாழ்வு வேண்டும்.
அரசியலார் அறவழியில் செயல்படுதல் வேண்டும் .
அதனாலே மக்களுக்கு வளம் பெருகவேண்டும்.
அவரவர் நம்பிக்கை அவரவர் உரிமை – அதை
அடுத்தவர் பழிக்காத அன்புநிலை வேண்டும்.
இறைவனோ, இயற்கையோ , இடர் விலகவேண்டும்.
இருளகன்று இவ்வுலகில் சுடர் ஒளிர வேண்டும். .
தமிழ் வாழ்க , தமிழினம் வாழ்க .
அன்புடன் ,
சிலேடை சித்தர் சேதுசுப்ரமணியம்
Tags: தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து