தந்தையர் தினம்
தந்தையர் தினம்
என் பெயரின் தலை எழுத்தாய்
உன் பெயர் இருக்கும்வரை ,
நீ என்னோடுள்ளதாகவே உணர்கிறேன் .
உன் உதிரம் தானே நான்
உன் மரபணு தானே
நம் உறவை உறுதி செய்யும் .
கரு மட்டுமா கொடுத்தாய்
கருத்தாய் எனை வளர்த்தாய்.
சுமைகளை நீ தாங்கி
சுகங்களை எனக்களித்தாய்
என் கரம் பிடித்து நடக்க வைத்தாய்
தோள் சுமந்து சிரிக்க வைத்தாய் .
கேட்டதை எல்லாம் வாங்கித்தந்தாய்
கெட்டதை விலக்க சொல்லித் தந்தாய்
‘சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே ‘ என்றார்
கடன் வாங்கியேனும் என்னை சான்றோனாக்கினாய் .
என்னை அறிவாளியாக்கினாய் ,
உன் பாசத்தால் கடனாளியாக்கினாய்
உன் பாசத்தால் கடனாளியாக்கினாய்
அக்கடன் தீர்க்க காலமெல்லாம் உன்னை
பக்கத்தில் வைத்து பாத பூஜை செய்வேன் .
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உன் நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை
மறவேன் நீ எனக்குச் செய்ததை
மறவேன் நான் உனக்குச் செய்ய வேண்டியதை
எந்தையே , என் உள்ளம் கவர்
தந்தையே , உன்னை என்றும் மறவாதென்
சிந்தையே ,
அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
21.06.2015
21.06.2015
Tags: தந்தையர் தினம்