தந்தையர் தினம்

Vinkmag ad
தந்தையர் தினம்

என் பெயரின் தலை எழுத்தாய்

உன் பெயர் இருக்கும்வரை ,

நீ என்னோடுள்ளதாகவே உணர்கிறேன் .

உன் உதிரம் தானே நான்

உன் மரபணு தானே

நம் உறவை உறுதி செய்யும் .

கரு  மட்டுமா கொடுத்தாய்

கருத்தாய் எனை வளர்த்தாய்.

சுமைகளை நீ தாங்கி
சுகங்களை எனக்களித்தாய்

என் கரம் பிடித்து நடக்க வைத்தாய்
தோள்  சுமந்து சிரிக்க வைத்தாய் .

கேட்டதை எல்லாம் வாங்கித்தந்தாய்
கெட்டதை விலக்க சொல்லித் தந்தாய்

‘சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே ‘ என்றார்
கடன் வாங்கியேனும் என்னை சான்றோனாக்கினாய் .

என்னை அறிவாளியாக்கினாய் ,
உன் பாசத்தால் கடனாளியாக்கினாய்
அக்கடன் தீர்க்க காலமெல்லாம் உன்னை
பக்கத்தில் வைத்து பாத பூஜை செய்வேன் .
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உன் நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை

மறவேன் நீ எனக்குச் செய்ததை
மறவேன் நான் உனக்குச் செய்ய வேண்டியதை

எந்தையே , என் உள்ளம் கவர்
தந்தையே , உன்னை என்றும்  மறவாதென்
சிந்தையே ,

அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
21.06.2015

News

Read Previous

நம்ப முடியாத அதிசயங்கள்

Read Next

பொது இடங்களில் இலவச வைஃபை… தகவல்கள் ஜாக்கிரதை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *