தத்துவ ரமளான் ! (முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஃபர் மன்பயீ)

Vinkmag ad

எத்தனையோ மாதங்கள் வருடத்தில் வந்தாலும்,

இனிதான மாதமென ரமளானைத் தந்தவனே !

எத்தனையோ வேதங்கள் உலகத்தில் உதித்தாலும்,

எளிதான போதமென குர்ஆனை உதிர்த்தவனே !

எத்தனையோ வணக்கங்கள் அடியார்க்கு விதித்தாலும்,

ஏற்றமிகு நோன்பதனை ‘முடியாக’ வைத்தவனே !

உத்தமனே ! சத்தியனே ! உலகாளும் ரட்சகனே !

உரைக்கின்ற புகழெல்லாம் உனக்காகும் இறையவனே !

தத்துவத்தைத் தரணியிலே தரம்பிரித்துப் பார்க்கையிலே

தனித்திருந்து விழித்திருந்து பசித்திருந்து வாழுவதை

உத்தமர்கள் போற்றுகிறார் ! புகழுகிறார் ! பாடுகிறார் !!

உலகமெலாம் இக்கருத்தை ஏற்று நடை போடுகிறார் !

சத்தியத்தை சமத்துவத்தை சரித்திரத்தில் தேடுகிறார் !

சரிநிகராய்ச் சமுதாயம் படைப்பதற்கு நாடுகிறார் !

இத்தரையில் இவையாவும் ஏற்றமிகு ரமளானின்

எழில்நோன்பு நோற்பவரே எளிதாகக் காணுகிறார் !

உதிரத்தை வியர்வையென உடல்சிந்தி உழைத்திட்ட

உயர் ‘ரிஸ்க்’கை இறைவனுக்காய் உண்ணாமல் பசித்திருப்பார் !

சதிபதியாய் சல்லாபம் சந்தோஷம் கொண்டாடும்

சகலமெலாம் இறைவனுக்காய் செய்யாமல் தனித்திருப்பார் !

விதியில்லா வணக்கமதும் இரவுபகல் தொழுவதற்கு

விருப்பமுடன் இறைவனுக்காய் உறங்காமல் விழித்திருப்பார் !

புதிதல்ல இதுவெல்லாம் பொன்னான முஃமினுக்கு !

புடம்போட்ட தங்கமென மின்னுகிற நோன்பாளிக்கு !

தொடர்பு எண் : 98 420 96527

News

Read Previous

கால்பந்தில் மின்சாரம்

Read Next

தர்மத்தின் தலை வாசல் நோன்பு ( முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ )

Leave a Reply

Your email address will not be published.