தண்டுவடம்
தண்டுவடம்
–சொல்லயாக்கியன்
மண்ணுக்கும் விண்ணுக்கும் நீளும்மரம்
ஆணிவேரும் பக்கவேரும் ஊறும்மரம்.
கண்ணுக்குத் தெரியாமல் வினையாற்றும்
சத்தெல்லாம் உறிந்துடல் மேலேற்றும்.
சல்லிவேர்கள் நரம்புக் கொடிகளாகும்
சதையெலும்பும் அவற்றின் பிடியுளாகும்.
மூச்சு
சுருக்கத்தில் அங்கங்கள் நிலையறியும்
பெருக்கத்தில் இங்குமங்கும் வினைபுரியும்.
உற்றறியும் மேந்தோலில் முடிவேர்கள்
உடலெல்லாம் மின்காந்த ஒளித்தூர்கள்.
வாய்மூக்கு கண்செவி இலைநிலைகள்
தலையதற்கு ஆயிரத்தில் தாமரைகள்.
கால்முதல் தலைவரை அதிர்வலைகள்
கண்மூடி செவிமடுப்பின் மெய்ம்நிலையே.
உயிராதி நெஞ்சக் குகைகோர்க்கும்
நெற்றியொளி அதனின் இருள்போக்கும்.
அங்கு
சுவாசமது நிலைத்தால் உடல்மறையும்
ஆகாசமது வெள்ளத்தில் சுகம்நிறையும்.
Tags: தண்டுவடம்