ஜெயலலிதாவுக்கு கவிதாஞ்சலி
’பொன்மன தெய்வம்’ ஜெயலலிதாவுக்கு கவிதாஞ்சலி!
——————————
புரட்சித் தலைவி பொன்மன தெய்வம்
பூமியில் சரித்திர புதுமையைப் படைத்தார்!
அரசியல் பாடம் அன்பாய் கற்று
ஐந்து முறையும் ஆட்சியை பிடித்தார்!
உரமென பேச்சு ஒளிர்ந்திடும் தொண்டர்
ஒளியினை ஏற்றி உயர்வினை வடித்தார்!
வரமென வந்த வாழ்விக்கும் தலைமை
வறியோர் வாழ்த்த வளமென கிடைத்தார்!
வெண்திரை அறிமுகம் வெண்ணிற ஆடை
வெற்றியின் நாயகி விருதினை கொண்டார்!
தன்னிக ரில்லா தங்கத் தாரகை
தரணியில் நின்று தடத்தினை கண்டார்!
பொன்மனச் செம்மல் புகழினைப் பாடி
போட்டியில் வெற்றி புலர்ந்திட வென்றார்!
மண்ணில் நிரந்தர முதல்வர் எனவே
மறையும் வரையில் மனதில் நின்றார்!
துணிச்சல் கொண்டு தொடரும் பணியே
துளைக்கா முடியா இரும்புத் திரையே!
அணியென தொண்டரின் அரிமா நடையே
அன்பாய் அழைக்கும் அம்மா மறையே!
கணிக்க முடியா கருத்து கணிப்பே
காலம் போற்றும் கருத்து சொரிவே!
மணியென ஆட்சி மாநிலம் நிறைவே- உன்
மறைவு ஒன்றே மனதில் குறைவே!
-ப.கண்ணன்சேகர், திமிரி.
9698890108.