சென்று வா ரமலானே!

Vinkmag ad

புடமிடு  தங்கமென புத்துணர்வை யூட்டி

தடம்புர  ளாவண்ணம் தக்கவழி காட்டி

நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி

கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம்

கடமையைச் செய்ய கருணை வரவாய்

உடனிருந் தாயே உளம்நிறை தோழா

விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து

மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா

 

 

 பட்டினித் தீசுட்ட பக்குவம் பெற்றதால்

 மட்டிலா பக்தி வளமுடன் கற்றதால்

 கொட்டிடும் கண்ணீரும் கோபம் கழுவியதே

 கட்டியே காத்திட்டக் கட்டுப்பா(டு) நோன்புடன்

 நட்டமே இல்லா நடுநிசி வித்ருடன்

சட்டமாய்க்  கூறும் சகாத்தின் கொடையையும்

திட்டமிட்  டோதும் திருமறையின் நன்மையையும்

கட்டியே தந்ததைக் கொண்டுசேர் ரப்பிடம்!

 

அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா….

Read Next

பெருநாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *