சுவனப் பூக்களே! நீங்கள் உறங்குங்கள்!
சுவனப் பூக்களே! நீங்கள் உறங்குங்கள்!
============================
சுவனத் தோட்டத்துப் பூக்களை
உங்களைக் கொ ண்டு அலங்கரிக்க
உங்கள் இறைவன் முடிவு செய்து விட்டான்
சுவனப் பூக்களே நீங்கள் உறங்குங்கள்!
தூய்மையான மாளிகைகளை
உங்களுக்காக தயார்படுத்திவிட்டான்
சுவனப் பூக்களே நீங்கள் உறங்குங்கள்!
உங்கள் பெற்றோர்களை உங்கள் விரல் பிடித்து
உங்களுடன் சுவனத்திற்கு அனுப்ப
ஏக இறைவன் உறுதிகொண்டு விட்டான்
சுவனப் பூக்களே நீங்கள் உறங்குங்கள்!
உங்கள் உயிர்களை விதையாகக் கொண்டு
உங்கள் தேசத்திற்கு விடுதலை விருட்சத்தை வழங்க
படைத்த இறைவன் முடிவு செய்து விட்டான்
சுவனப் பூக்களே நீங்கள் உறங்குங்கள்!
உங்கள் கண்களை மூடி
உறங்கிக் கொண்டிருக்கும்
உலகின் கண்களைத் திறக்க
உயர்ந்த இறைவன் முடிவு செய்துவிட்டான்
சுவனப் பூக்களே நீங்கள் உறங்குங்கள்!
வீழ்வது நீங்களாக இருப்பினும்
வாழ்வது வருங்கால சந்ததியாக இருக்கும்
சுவனப் பூக்களே நீங்கள் உறங்குங்கள்!
உங்கள் மக்களுடன் யாருமில்லை என்று வருந்த வேண்டாம்
என்றும் நாங்கள் உடனிருப்போம்
சுவனப் பூக்களே நீங்கள் உறங்குங்கள்!