சுற்றுச் சூழல் தூய்மை

Vinkmag ad

ஆக்கம்

தமிழ்மாமணி, கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, செல்: 9976372229

சுற்றுச் சூழல் தூய்மை

உலகத்தின் கவலையே

இது தான் !

சுற்றுச் சூழல் தூய்மை நாம்

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் !

இது,

மனித வாழ்வுக்கு மட்டுமல்ல,

புவியின் வாழ்வுக்கும் பொருந்தும்

மனிதன் இயற்கையோடு இணைந்து

வாழும்போது எந்தப் பிரச்சினையும்

இல்லை !

மனிதன்

இயற்கையை மீறுகிறபோதுதான்

அவஸ்தை ! ஆபத்தெல்லாம் !

இயற்கைச் சீற்றம், இயற்கைச் சீற்றம்

என்கிறோமே…!

அதைச் சீண்டுவது … யார்?

நாம் தானே !

அண்டங்களையெல்லாம்

மாசுபடுத்திவிட்டு…

ஐயோ அம்மா என்று

அலறினால்… எப்படி?

விஞ்ஞான வெளிச்சத்தில்

இருக்கும் நாம்

சுற்றுச் சூழல் விஷயத்தில்

கொஞ்சம் சரிந்துதான் இருக்கிறோம் !

ஆம்

காடுகளை அழித்தோம்

கேடு வந்தது !

மரங்களை வெட்டிச் சாய்த்தோம்

மழை நின்றது !

இன்று கிணற்றுக்குள்

வாளியைவிட்டால்

தண்ணீர் வருவதில்லை !

கண்ணீர்தான் வருகிறது !

நிலத்தடி நீர்மட்டம்

குறைந்து கொண்டேவந்து

நம் எதிர்காலத்தை

கேள்விக்குறியாக்குகிறது !

மழை நீர் சேகரிப்பே

இதற்கு மாற்றுவழி !

அணுமின் கழிவு

தொழிற்சாலைக் கழிவு

மனிதக் கழிவு !

இவைகளெல்லாம்

நல்ல சுற்றுச் சூழலுக்கு

எதிரானவைகள் !

எதிரணிகள் !

வறண்ட பாலைவனங்களில்

அணுகுண்டை வெடிக்கிறோம்

அது பூமியையும் வானத்தையும்

மாசுபடுத்துகிறது,

இதற்கு என்னதான்… தீர்வு?

பிளாஸ்டிக் பயன்பாட்டை

தவிர்க்கலாம்

சுற்றுச் சூழலைத்

தூய்மையாக வைத்திருக்கும்

வீடுகளுக்கு, வீதிகளுக்கு

உள்ளாட்சித் துறை

ஊக்கப்பரிசு வழங்கி

உற்சாகப்படுத்தலாம் !

ஆகவே

தூய்மை காப்போம்

அதற்காகத் தொண்டு செய்வோம் !

வாரீர் !

 நன்றி : இளையான்குடி மெயில்

ஜனவரி 2012

News

Read Previous

சிரிப்பு

Read Next

“பசுவதை” – மிருகங்களின் கவலை – வெ. ஜீவகிரிதரன்

Leave a Reply

Your email address will not be published.