சுகமாய் எழுந்து வா, சுர்ஜித்

Vinkmag ad
அன்னையின் கருவறையில்
அனுபவித்த கதகதப்பை
அனுபவிக்கவே மீண்டும்
ஆழ்குழாய் வழியாக
பூமியன் கதகதப்பைக் காண
புதைந்தாயோ குழந்தையே சுர்ஜித்!
சட்டங்களும் விதிகளும்
சரியில்லை என்பதை
சரியாக உணரவேண்டும் மன்பதை
பட்டங்கள் பெற்றவர்ட்குப்
பாடங்களும் பயிற்சிகளும்
பள்ளத்திலிருந்துச் சொல்கின்றாயோ?
உள்ளங்கள் வேண்டுகின்றன
பள்ளங்கள் தோண்டுகின்றனர்
உறங்காமல் உண்ணாமல் இருக்கின்றனர்
இறங்கிய வேகத்தில்
எழுந்து வா எழுச்சித் தர வா வா
மதங்களால் பிரிந்தவர்களை
மனங்களால் கூட்டினாய்
நிதமுனக்காகப் பிரார்த்தனை
நிகழவே மாற்றினாய்
சிரியாவில் இதுபோல்
சிக்கியப் பாலகனும்
அரிதாய்க் கிடைத்தானாம்
அதுபோல் மீண்டு வா
அதுவரைத் தோணாடுவோம் பார்!
“பாதாளக் குழிகளை மூடுக”
பாடம் நடத்துகின்றாயோ
பாலகனே நீதான் எங்கள்
பாட வகுப்பாசிரியரானாயோ?
ஆசிரியரை விடவும்
ஆகச் சிறந்த
தியாகமடா நீ செய்தது!
தெளிவூட்டச் சென்றது!!
தோண்டுவோம் தோண்டுவோம்
தோளில் உன்னை வீரர்கள் சுமக்கும் வரை
வேண்டுவோம் வேண்டுவோம்
வேதனை தீர்க்க இறையருள் கிடைக்கும் வரை
வா வா குழந்தாய்
வாரியணைக்க
வாசலிலே உன் தாய்!
_கவிதை ஆக்கம்: “கவியன்பன் கலாம்” அதிரை

News

Read Previous

யாதும் நன்றே யாதும் தீதே

Read Next

சுஜித்……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *