சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது சாஹிப்

Vinkmag ad

சிராஜுல் மில்லத் .கே..அப்துஸ் ஸமது சாஹிப்  10 –ம் ஆண்டு  நினைவு நாள்  11-04-09

சிராஜுல் மில்லத் அவர்களுக்கு       கவிதைப் பூக்களால் பிரார்த்தனை

தொகுப்பு – ஆலிமான் ஆர்.எம்ஜியாவுதீன்

எங்கள் அருமைத் தலைவரின் சமுதாயச் சேவையை உழைப்பை – தொண்டூழீயத்தை –கருணையோடு அங்கீகரித்து இறைவா ஏற்றுக் கொள் பிழைகளைப் பொறுத்துஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்                   வாழ்வைக் கொடுத்தருள் !

                              –எழுத்தரசு .எம்.ஹனீப்

 

சிறகில்லாமல் பறந்து போன

சிராஜுல் மில்லத் செம்மலே !

அறிவொளி பரப்பும் மணிச்சுடராக

அன்பை வழங்கிய வள்ளலே !

கபருஸ்தானில் மறைந்தபோதிலும்

கல்புஸ்தானில் வாழுகிறார்.

காதர் மொகிதீன் தலைமையிலே – நம்

கட்டுப்பாட்டுக்கு வாழ்த்துகிறார்

                                      –நாகூர் சலீம்

தலைவரே !

உங்களின்

தெவிட்டாத செந்தமிழ்ப் பேச்சு

எங்கள் செவிகளில்

மரணித்துவிட வில்லை ….

எங்களின்

அரசியல் பயணம்

தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது

ஆம்!

உங்களின் வழிகாட்டுதல்

மரணித்துவிட வில்லை…..

                           –கவிஞர் இஸட்ஜபருல்லாஹ்

வாழிய சிராஜுல் மில்லத் !

  வாழிய அமீனுல் உம்மத்

வாழிய அப்துஸ் ஸமது

  வல்லவன் அருளைக் கொண்டே

ஊழியம் செய்து (வந்த

  உன்னத நெஞ்சே வாழ்வில்

நாழிகை தோறும் செய்த

  நன்மையுள் என்றும் வாழ்க !

                             –ஏம்பல் தஜம்முல் முஹம்மது

அன்புப் பெட்டகமே

அறிவுக் கருவூலமே

சிராஜுல் மில்லத்தே

நும் நினைவில்

எம் பயணம்

என்றும் தொடரும்

           –வடக்குகோட்டார் .முசெய்யது அஹமது

சோபனச் சுரங்கமே ! – எங்கள் சொப்பன அரங்கமே

சேமச் சிகரமே ! சிராஜுல் மில்லத்தே !

இன்றைய அரசியலுக்கு நேற்றைய வழிகாட்டியே !

உங்கள் புகழ் நாரின் பூக்களல்ல

நட்சத்திரப் பூக்கள் என்றும் உதிராதவை உயர்ந்தவை !

                      –தத்துவக் கவிஞர் பதுருத்தீன்

பிழை சேரா நபிவழியைத் தொடர்ந்தவர் ! – என்றும்

பிறைக்கொடியைப் புகழ்க் கொடியாய்

                             தலைநிமிர வைத்தார்

கலைநோக்கு கவிதைத் திறன் –

              சொல்லாற்றல் மிக்கவர் ! – அப்துஸ்

ஸமதெனும் சமுதாய விளக்கு ! – இஸ்லாம்

அமுதக் கொள்கைகளே அன்னாரின் இலக்கு !

                             –கவிஞர் வழுத்தூர் ஒளியேந்தி

பல்வேறு சாதனைகள்

படைத்திட்ட சாதனையாளர் !

நல்லோர்கள் நாவினிலே

நாளும் வாழும் சிராஜுல் மில்லத்

                                –சீர்காழி இறையன்பன்

மதுப்புதுவை மாநிலத்தில்

பிறந்தபோதும்

மதுவிலக்கு கொள்கையிலே

பிடித்திருக்கும் !

எது புதுமை என்பதிலே

தெளிவிருக்கும்

என் தலைவரின் புகழென்றும்

நிலைத்திருக்கும் !

                                –கவிஞர் கிளியனூர் அஜீஸ்

என்னவென்று எழுத்தில் சொல்ல

எப்படிதான் அழுது சொல்ல

பொன்னுடலை அடக்கம் செய்தோம்

பொறுமையுடன் பிரார்த்திப்போம் நாம் !

                               –கவிஞர் இக்பால் ராஜா       

 

 

News

Read Previous

கோடையும் வாடையும்

Read Next

Blood sugar tests: Understanding your results‏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *