சிந்தனை வரிகள்
சிந்தனை வரிகள்
———————————
வசதி படைத்த
மைய்யத் தென்றால்
பங்கு கொள்ள
துடிக்கிறாய்
வசதி யற்ற ஏழை
மைய்யத் தென்றால்
அங்கு செல்லத்
தயங்குறாய்.
பணக்காரர் மரணித்தால்
உடனே அங்கு சென்று
உன் வரவை பிறரறிய
பதிவு செய்கிறாய்.
பக்கத்தில் ஒர் ஏழை
மரணித்தததை அறிந்தாலும்
அதைக் கண்டு கொள்ளாமல்
இருக்கிறாய்.
மரணித்தவரை
குளிப்பாட்டுவதும்
கபனிடுவதும் நம்
யாவரின் மீதும் கடமையே
மைய்யத்துப் பணி
செய்யத்தான் சிலர் இருக்கிறரே
என்றெண்ணி நாம்…….
ஒதுங்கிச் செல்வது மடமையே
ஆக்கம் :- ஏ.ஆா்.தாஹா
Tags: சிந்தனை வரி