சித்திரை மாதமே வருக
சத்தியம் நித்தமும் பெருக
சித்தர்கள் அருளைத் தருக
உத்தமர் உள்ளமும் உருக
சித்தர் ஓரையும் சிவனே
சித்திரை மாதமும் அவனே
சித்தமும் நித்தமும் சிவனே
சிந்தையில் திகழொளி பவனே
திருமால் தந்திட்ட பஞ்சாங்கம்
திருவே சரணம் என்றென்றும்
ஒருநாள் உனையே நினைக்க
உருகும் மனமும் தினமும்
சிவனின் கொடையே தமிழ்ச்சங்கம்
அதுவே நமக்கு முதற்ச்சங்கம்
முருகன் கொடையே தமிழ்ச்சங்கம்
அதுவே இரண்டாம் தமிழ்ச்சங்கம்
திருமால் கொடையே தமிழ்ச்சங்கம்
அதுவே மூன்றாம் தமிழ்ச்சங்கம்
கருணை வடிவே பெருங்கடலே
கனமும் தினமும் உம்நினைவே
இராவணன் மகனே இந்திரசித்தன்
இராவண இந்திர இரட்டையர் மீனம்
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு சித்தனாய்
உயர்வாய் வகுத்தவன் உன்னதத் தமிழன்
தமிழ்ப் புத்தாண்டு இன்று தொடக்கம்
சித்தர்கள் அருளால் நன்மை கிடைக்கும்
தமிழ்மொழி பேசும் அனைவருக்கும்
—
= அன்பே கடவுள் =
=================
முனைவென்றி நா. வேல்முருகன் சேர்வை,
த/பெ த. நாகராசன் சேர்வை ,
எமனேஸ்வரம் – ௬௨௩௭௦௧ (623701),
பரமக்குடி வட்டம்,
இராவணநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: ௮௭௫௪௯௬௨௰௬ (8754962106).
http://
————-
Munaivendri N. Velmurugan servai,
S/O T. Nagarajan servai,
Paramakudi Taluk,
Ravananathapuram District,
Thamizhnadu.
Mobile: 8754962106