கொரோனா
கரோனா
பூவையர் நெளிந்தாடும் இளமஞ்சள் பூப்பந்தாய்
சாமந்திச் செண்டாக உருண்டு திரண்டிருக்கும்
பூவுலகின் மேல் முழுதும் மூக்குத்திப் பூவாகும் —
பூமையக் கோலம்— ஓவியனின் தூரிகைக்குச் சவால்
’டாமினோ’ சீட்டடுக்களின் ஜகத் ஜாலம் எல்லாம்
காமிக்கும் கரோனா வைரஸ் போல் ஒன்றை
நாமிது நாள் வரையும் எங்கேயும் கண்டதில்லை
எத்தனை அழகு! எத்தனை நலங்கு! கைத்தலம் ஏந்தி
முத்தமிட அத்தனை ஆசை! அணுவினும் சிறியதுள்
எத்தனைக் கூத்து! நித்யம் உலவிடும்; வாசமோ, ஓசையோ
சத்தமோயின்றி மனிதருள் செய்திடும் இருவார வாசம்.
சுவாச கோசம் சுருங்கிடத் திணரலில் நெருங்கிடும் மரணம்
’நிவாச நிவர்த்தி எதுவுமின்றி எரிமேடை இடந்தராது,
மண்மேல் கிடக்குதிங்கு மருத்துவரின் பொதுநலம்
கணினியர் கைபிசையும் மஞ்சள் நிறப் பந்தாக
கணத்தில் உனைக் கசக்கிவிட மனதில் ஓர் ஆசை!
மனிதனின் ப்ராண வாயு போதாதென்று இப்போது
இனத்தால் இணந்த பூனை, புலி, சிங்கமென விலங்குகளைத்
தாக்குகின்ற முண்டமே, கோடான கோடி கொசுக்கள்
நீக்கமற நிரைந்துளவற்றை அழிக்க வழி அறியலையோ?
எம்.டி.ஜெயபாலன்