கொடுத்த வாக்கை மீறாதே!

Vinkmag ad

கொடுத்த வாக்கை மீறாதே!
———————————+——————
அந்த நகரில் எலிக்கூட்டம்
தொந்தர வாக மாறியது!

வீட்டில் தெருவில் அரண்மனையில்
எல்லா இடத்திலும் ஓடியது!

மக்கள் மேலே ஓடியது
மன்னர் மடியிலும்  ஓடியது

எலிகளைப் பிடிக்க குழலூதி
ஒருவன் வந்தான் உறுதியுடன்

ஆயிரம் காசுகள் தருவதாக
பேரம் பேசி முடித்தார்கள்

குழலின் இசையில் மயங்கித்தான்
அவன்பின் சென்றன எலிகளெல்லாம்!

கடலுக் குள்ளே மூழ்கடித்தான்
பேசிய காசைக் கேட்டுநின்றான்!

எலிகளைப் பிடிக்க இவ்வளவா!
ஏளனம் செய்தே இல்லையென்றார்!

மீண்டும் இசைத்தான் குழந்தைகள்
மயங்கி அவன்பின் சென்றனரே!

பெற்றோர் எல்லாம் கலங்கினரே!
பேசிய தொகையைத் தந்தனரே!

குழந்தைகளைத் திரும்ப அனுப்பிவிட்டே
குழலூதி தானே சென்றுவிட்டான்!

கொடுத்த வாக்கை மீறாதே!
துயரச் சேற்றில் சிக்காதே!

மதுரை பாபாராஜ்

News

Read Previous

ஏன்?”

Read Next

எமைப்பார்த்து நகைத்துவிடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *