கூச்சல்

Vinkmag ad

கூச்சல்

================================================

ருத்ரா


ஆடு மேய்க்கும் அப்பன்.

வயலில் களை பறிக்கப்போகும்

அம்மை.

வயிற்றுப்பாட்டுக்கே

மாடு போல் 

நுரை தள்ளி 

பாரம் இழுக்கும் தகப்பன்.

எச்சில் பாத்திரம் கழுவி 

அதில் மிஞ்சிய எச்சிலையும்

வீட்டுக்கு கொண்டுவந்து

பிள்ளைகளுக்கு

உணவு ஊட்டும் தாய்.

இது நம் பெரும்பான்மைச் சித்திரம்.

உழைக்காமலேயே 

உண்டு

ஏப்பம் விட்டு

அந்தக்குரலையே 

வேதம் என்று சொல்லி

மக்களுக்கு “கடவுள்”புரோக்கர்களாக‌

ஏமாற்றும் சிறுபான்மைச்சித்திரமாக‌

இருப்பவர்கள்

அறிவு வெளிச்சம் 

எனும் 

மொத்த சொத்தை 

சுரண்டுவது தானே

புதிய கல்விக்கொள்கை.

மூன்றாவது வகுப்பிலும் 

ஐந்தாவது வகுப்பிலும் 

இந்த ஏழை எளிய வர்க்கத்தை

பொதுத்தேர்வு மூலம்

வடிகட்டி எறிந்து விட்டு

இந்தியாவையே ஒரு

இருட்டுக்குள் தள்ளி விடுவது தானே

இந்த புதிய கல்விக்கொள்கை.

முகமூடி போட்டுக்கொண்டு வரும்

இந்த “குலக்கல்வித்திட்டத்தின்”

சூழ்ச்சியை 

அழித்தொழிப்பதே

தற்போதைய நம் ஜனநாயகப்போரின் 

முழக்கம்.

ஏ! ஊடகங்களே! ஏடுகளே!

நாடே தீப்பற்றி எரிகையில்

இந்த சுரண்டல் கூட்டங்களுக்கு

கற்பூரம் காட்டிக்கொண்டிருக்கவா

வெறும் 

கூச்சல் கிளப்பிக்கொண்டிருக்கிறீர்கள்?

News

Read Previous

பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி

Read Next

தஞ்சை குடமுழுக்கு கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *