காற்றே விடை கூறு

Vinkmag ad

கருதரிக்க வைத்தத்
தருக்களை எல்லாம்
உருதெரியாமல் அழித்ததேன்
பெருங்காற்றுப் புயலே!

கர்த்தனிட்ட ஆணைக்குக்
கட்டுப்பட்டு வந்தாயோ?
“வர்த”ப் பெயர் கொண்டு
வதம் செய்ய வந்தாயோ?

மரந்தான் வளர்த்தோம்
மழைதரும் என்றே
மரங்களை அழித்து
மழையின்றித் தவிக்கவா?

ஆலைகளின் புகைதான்
ஆபத்துகளாகி உன்னைச்
சாலை மரங்களைச்
சாய்க்க வைத்ததோ?

_ அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

கிராமம் எனும் கொடுங்கனவு!

Read Next

தவறுகளை சுட்டி காட்டுவதிலும் ஒரு இங்கிதம் இருக்க வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *