காதல்
கண்களை மூடுகிறேன்
கடலென விரிகிறது
உன் நினைவு
வண்ணங்களை
நீ சுமக்கிறாய்
வானத்தை
நான் சுமக்கிறேன்
வண்ணத்துப்பூச்சியைத்
தேடித்திரிகிறோம் நாம்……
போவென்கிறாய்
போய்விடுகிறேன்
உன்பின்னால் நானும்
என்பின்னால் நீயும்
நினைவுகளாய் பின்தொடர்கிறோம்
பூவா தலையா
என்கிறாய் நீ
தலையில் பூ
என்கிறேன் நான்
ஒரு முடிவுக்கு
வந்து விடுகிறோம் நாம்
முதல்பக்கம் நீ
முடிவுபக்கம் நான்
இடைபட்ட பக்கங்களை
நிரப்பிக்கொள்கிறது காதல்…
– கவிப்பிரியன் ஜீவா