கவிதை என்ன செய்யும்!!!

Vinkmag ad
கவிதை என்ன செய்யும்!!!
கனவு காணச் செய்யும்
கனவுகள் துரத்தச் செய்யும்
சுயம் உணர்த்தவும்
சுற்றம் நேசிக்கவும்
பழக்கும்…
பூக்களோடு சிரிக்கவும்
புயலோடு பறக்கவும்
கற்பிக்கும்…
கடமையை காதலோடும்
காதலை கடமையோடும் காணச்செய்யும்…
கண்ணீருக்கு இறங்கவும்
கடல்கண்டு வியக்கவும்
கற்றுத்தரும்…
வெறும் கவிதை என்ன செய்யும்
உலகிற்கு உன்னை உணர்த்தும்
உனக்கு உலகை உணர்த்தும்….
வேரிலிருந்து பலப்படுத்தவும்
வேரோடு சாய்க்கவும்
நெஞ்சைத் தைக்கும்
ஒரு கவிதை போதும் தானே…
– தீபிகா சுரேஷ்

News

Read Previous

மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும்!

Read Next

சந்தமாமா ஓவியர் சிவசங்கரன் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *