கவிதையும் கற்பனையும்
உள்ளதை எழுதினால்போதும் ஓராயிரம்வார்த்தை வரும்!
உத்தியுடன் எழுதுதற்கே கற்பனை உதவி வேண்டும்!
எப்பொருளை எழுதுதற்கும் கற்பனை கைகொடுக்கும்!
அப்பொருளை உள்வாங்கி கவிதையது உயிர்பிறக்கும்!
தப்பாமல் இவையிரண்டும் நம்வசமாய் ஆவதனால்
எப்பாடு பட்டாவது எழுதிவிடுகின்றோம்!!
கவிதையும் கற்பனையும் இரட்டைக் குழந்தைகளா?
கலந்துவரும் என்றுசொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
பிறந்துவரும் கவிதையிலே கற்பனைதான் கலந்திருக்கும்!
சிறந்ததென கவிதை சொன்னால் பிற்பாதி புனைந்திருக்கும்!
—
கவிஞர் காவிரிமைந்தன்
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
பம்மல், சென்னை 600 075
தற்போது – அபுதாபி – அமீரகம்
00971 50 2519693
00971 50 4497052