கவிக்கோவிற்கு இரங்கற்பா
கவிக்கோவிற்கு இரங்கற்பா
ஓவியத்திற்கு ஓர் ரவிவர்மன்
காவியத்திற்கு கவிகம்பன் புது
கவிதைக்கு நீ கவிக்கோ இனி உன்
கவின் முகம் காண்பதெங்கோ
கவிதையில் நீ பூ சொன்னால்
காகித்த்தில் பூ பூக்கும்
கவிதையில் நீ தீ சொன்னால்
காகிதம் பற்றி எரியும்
வீறுகொண்ட உன் புதுகவிதை
விழித்தெழுந்து வீதிக்கு வந்ததால்
தமிழன்னை புது கிரீடம் சூடினாள்
தரணி எல்லாம் உன் புகழ் பாடினாள்
அம்மி கொத்த சிற்பி எதற்கு என்று
வெள்ளித்திரை செல்ல மறுத்தாய்
தும்பியாய் துள்ளி தூய தமிழ் தந்தாய்
எம்பி பார்க்கும் உயரம் நீ ஏகினாய்
புதிதாய் உதித்த உன் கவிதையில்
பூத்து குலுங்குயது தமிழ்மலர்காடு
புதுக்கவிதை பொழிவு கண்டு
புவியில் புது வெளிச்சம் வந்தது
காக்க வைத்த கவிஞர்களே என்ற
கலைஞரிடம் காக்கத்தானே நீஎன்று
கவிதை பாடி அவரை வென்றாய்
கரித்துகள் தோண்டி வைரம் கண்ட
கறுவூலங்கள் எங்கே மறைத்தாய்
வீழ்ந்தாலும் மீண்டும் எழுவோம்
விண்மீனாய் வெளிச்சம் தருவோம் என
உன்தோழர்களின் மனம் தேற்றினாய்
உனை இழந்த எமை இனி யார் தேற்றுவார்
எம் முஹம்மது யூசுப் உடன்குடி