கவிக்கோவிற்கு இரங்கற்பா

Vinkmag ad
கவிக்கோவிற்கு இரங்கற்பா
ஓவியத்திற்கு ஓர் ரவிவர்மன்
காவியத்திற்கு கவிகம்பன் புது
கவிதைக்கு நீ கவிக்கோ இனி உன்
கவின் முகம் காண்பதெங்கோ
 கவிதையில் நீ பூ சொன்னால்
காகித்த்தில் பூ பூக்கும்
கவிதையில் நீ தீ சொன்னால்
காகிதம் பற்றி எரியும்
வீறுகொண்ட உன் புதுகவிதை
விழித்தெழுந்து வீதிக்கு வந்ததால்
தமிழன்னை புது கிரீடம் சூடினாள்
தரணி எல்லாம் உன் புகழ் பாடினாள்
அம்மி கொத்த சிற்பி எதற்கு என்று
வெள்ளித்திரை செல்ல மறுத்தாய்
தும்பியாய் துள்ளி தூய தமிழ் தந்தாய்
எம்பி பார்க்கும் உயரம் நீ ஏகினாய்
புதிதாய் உதித்த உன் கவிதையில்
பூத்து குலுங்குயது தமிழ்மலர்காடு
புதுக்கவிதை பொழிவு கண்டு
புவியில் புது வெளிச்சம் வந்தது
காக்க வைத்த கவிஞர்களே என்ற
கலைஞரிடம் காக்கத்தானே நீஎன்று
கவிதை பாடி அவரை வென்றாய்
கரித்துகள் தோண்டி வைரம் கண்ட
கறுவூலங்கள் எங்கே மறைத்தாய்
வீழ்ந்தாலும் மீண்டும் எழுவோம்
விண்மீனாய் வெளிச்சம் தருவோம் என
உன்தோழர்களின் மனம் தேற்றினாய்
உனை இழந்த எமை இனி யார் தேற்றுவார்
எம் முஹம்மது யூசுப்    உடன்குடி

News

Read Previous

தலைவன் எங்க ?

Read Next

பால்நினைந்து கொடுத்திடுவீர் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *