கவலைகள்

Vinkmag ad

மனத்தில் சிறையாய் வலைதான் கவலை
வனத்தில் அறியா வழிபோல் மனமும்
தனித்த இடத்தினி்ல் தாங்கா நிலையில்
இனிக்கும் செயல்கள் இழந்து.

இறந்த பொழுதுகள் எங்குமே மீளா
மறந்து விடுங்கள் மருந்தென காலம்
கடந்து மனத்தின் கவலை களைக
நடக்கும் இனிவரும் நாள்.

நாட்டில் தினமும் நடக்கும் கொடுமைகள்
வீட்டில் வளரும் விடையறியாத் துன்பங்கள்
மூளையின் ஒரிட மூலையில் கவலைகொள்
வேளைதான் நற்கவலை வித்து.

சிக்கலெனும் பூட்டைச் சிறப்பாய்த் திறக்கவே
அக்கணத்தில் உள்ளம் அறிய விடைதரும்
சிந்தனை நற்கவலைச் சேர்ந்த திறவுகோல்
நிந்தனை யில்லை நினை.

கவியன்பன் கலாம்

News

Read Previous

கல்லிடைக்குறிச்சி பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா

Read Next

காலத்தை வென்ற விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *