கலாம் ஒரு சரித்திரம் !

Vinkmag ad

கலாம் ஒரு சரித்திரம் !

கவிஞர் இரா. இரவி!

மாமனிதர் அப்துல் கலாம் ஒரு சரித்திரம்!
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்திட்ட வரலாறு!

இராமேசுவரம் தீவில் இவ்வளவு கூட்டம்
இதுவரை கூடிய வரலாறு இல்லை!

தலைநகரிலிருந்து தலைமை அமைச்சர் வருகை
தலையாய கடமையாக இறுதி மரியாதை!

படகோட்டி மகன் பாரதத்தின் முதல் குடிமகன்!
படம் காட்டாத எளிமையின் சின்னம்!

அறிவால் உயர்ந்து அகிலத்தில் சிறந்தவர்!
அன்பால் கனிந்து இதயங்கள் வென்றவர்!

மரபுகளை உடைத்த மனிதாபிமான சிகரம்!
மாணவர்களை நேசித்த ஆசிரியர் திலகம்!

அகந்தை என்றால் என்னவென்று அறியாதவர்!
ஆணவம் என்றால் என்னவென்று அறியாதவர்!

உலகப்பொதுமறையை வாசித்து நேசித்தவர்!
உலகப்பொதுமறையின் வெற்றிக்குக் காரணமானவர்!

கேள்விகள் கேட்க வைத்து பதிலளித்தவர்!
கடுமையான சொற்களை என்றும் பயன்படுத்தாதவர்!

நூல்களை மட்டுமல்ல வீணையையும் வாசித்தவர்!
நூலகம் வீட்டில் வேண்டும் உணர்த்தியவர்!

செயற்கைக் கோள்கள் ஏவியது மட்டுமல்ல!
செயற்கைக் கால்களும் செய்து மகிழ்ந்தவர்!

இயற்கை நேசித்து இயற்கை ரசித்தவர்!
இயற்கையோடு இயற்கையான போதும் வாழ்கிறார்!
———————————————————–
நல்ல மனிதர்களுக்கு மரணம் இல்லை உண்மை !
கவிஞர் இரா .இரவி

இறந்தால் ஊர் அழ வேண்டும் என்றாய் நீ
இறந்தாய் உலகமே அழுதது உனக்காக !

குடும்பத்தில் ஒருவர் இருந்து விட்டது போல்
குவலயமே கண்ணீர் வடித்தது உனக்காக !

எங்கு பாரத்தாலும் உந்தன் உருவப் படங்கள்
எங்கு கேட்டாலும் உன்னைப் பற்றிய பேச்சு !

கைரேகையில் எதிர்காலம் பார்த்து காலம் கழிக்காதே
கைகளற்றவர்களுக்கும் எதிர்காலம் உண்டு என்றாய் !

சோதிடம் பார்த்து சோர்ந்து போகாதே
சுறுசுறுப்பாய் வாழ்க என்று அறிவுறுத்தினாய் !

வறுமையில் வளர்ந்திட்ட போதும் என்றும்
வசதிகளுக்கு ஆசைப்படாத புத்தன் நீ !

தூக்குத் தண்டனையை என்றும் விரும்பியதில்லை
தூக்குத் தண்டனை நீக்கிடக் குரல் தந்தாய் நீ !

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்
என்று இலக்கணம் வகுத்துச் சென்றாய் !

தலைக்கனம் என்றுமே வந்ததில்லை உமக்கு
தலைமையில் இருந்தபோதும் எளிமையில் நீ

மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்று
மனிதர்களை மதித்து நடந்து காட்டினாய் நீ !

மதங்களை விட மனிதமே பெரிது என்று
மதவாதிகளுக்கு புரிய வைத்தாய் நீ !

குடும்பத்தினரைக் கூட குடியரசுத்தலைவர் மாளிகையில்
கூட வைத்துக் கொள்ளாதவன் புனிதன் நீ !

கர்மவீரர் காமராசர் போலவே மணமுடிக்காமல்
கடமையாற்றி மக்களுக்காக வாழ்ந்தவன் நீ !

நல்ல மனிதர்களுக்கு மரணம் இல்லை உண்மை
நாடு மதிக்கும் உனக்கும் மரணம் இல்லை !

கவிஞர் இரா .இரவி

இறந்தால் ஊர் அழ வேண்டும் என்றாய் நீ

இறந்தாய் உலகமே அழுதது உனக்காக !

குடும்பத்தில் ஒருவர் இருந்து விட்டது போல்

குவலயமே கண்ணீர் வடித்தது உனக்காக !

எங்கு பாரத்தாலும் உந்தன் உருவப் படங்கள்

எங்கு கேட்டாலும் உன்னைப் பற்றிய பேச்சு !

கைரேகையில் எதிர்காலம் பார்த்து காலம் கழிக்காதே

கைகளற்றவர்களுக்கும் எதிர்காலம் உண்டு என்றாய் !

சோதிடம் பார்த்து சோர்ந்து போகாதே

சுறுசுறுப்பாய் வாழ்க என்று அறிவுறுத்தினாய் !

வறுமையில் வளர்ந்திட்ட போதும் என்றும்

வசதிகளுக்கு ஆசைப்படாத புத்தன் நீ !

தூக்குத் தண்டனையை என்றும் விரும்பியதில்லை

தூக்குத் தண்டனை நீக்கிடக் குரல் தந்தாய் நீ !

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்

என்று இலக்கணம் வகுத்துச் சென்றாய் !

தலைக்கனம் என்றுமே வந்ததில்லை உமக்கு

தலைமையில் இருந்தபோதும் எளிமையில் நீ

மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்று

மனிதர்களை மதித்து நடந்து காட்டினாய் நீ !

மதங்களை விட மனிதமே பெரிது என்று

மதவாதிகளுக்கு புரிய வைத்தாய் நீ !

குடும்பத்தினரைக் கூட குடியரசுத்தலைவர் மாளிகையில்

கூட வைத்துக் கொள்ளாதவன் புனிதன் நீ !

கர்மவீரர் காமராசர் போலவே மணமுடிக்காமல்

கடமையாற்றி மக்களுக்காக வாழ்ந்தவன் நீ !

நல்ல மனிதர்களுக்கு மரணம் இல்லை உண்மை

நாடு மதிக்கும் உனக்கும் மரணம் இல்லை !

—————————————————————————

உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் !

கவிஞர் இரா. இரவி !

இராமேசுவரம் எனும் தீவில் பிறந்து

இராமேசுவரத்திற்கு புகழ் சேர்த்தவர்!

நாத்திகர்களுக்கும் புனித ஊராக

நல்ல இராமேசுவரத்தை ஆக்கியவர்!

படகோட்டி மகனாகப் பிறந்து அவர்

பண்புள்ள முதற்குடிமகனாகச் சிறந்தவர்!

செய்தித்தாள் விற்றுப் படித்து எல்லா

செய்தித்தாள்களின் தலைப்பு செய்தியானவர்!

எளிமையின் சின்னமாக விளங்கியவர்!

இனிமையின் இருப்பிடமாகத் திகழ்ந்தவர்!

பொக்ரானில் அணுகுண்டு வெடித்தவர்!

பூஉலகில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர்!

தமிழர்களின் பெருமையை உணர்த்தியவர்!

தன்னிகரில்லா மனிதராக உயர்ந்தவர்!

இரண்டாவது காந்தியடிகளாக வாழ்ந்தவர்!

இரண்டாவது நேருவாக வலம் வந்தவர்!

மனிதநேய மாண்பாளராக வாழ்ந்தவர்!

மாமனிதர் உழைப்பின் சிகரமானவர்!

இறுதிமூச்சு உள்ளவரை உழைத்தவர்!

இலக்கணமாக வாழ்ந்திட்ட நல்லவர்!

கனவு நாயகனாக விளங்கியவர்!

கனவுகள் நனவாக உதவியவர்!

சோதிடம் நம்பாத பகுத்தறிவாளர்!

சோகம் வேண்டாமென போதித்தவர்!

கபடமற்ற குழந்தை உள்ளம் கொண்டவர்!

குழந்தைகளை எந்நாளும் நேசித்தவர்!

மணம் முடிக்காமல் வாழந்தவர்!

மனித மனங்களை கொள்ளையடித்தவர்!

மயில்சாமி அண்ணாத்துரைக்கு குருவானவர்!

மட்டற்ற விஞ்ஞானிகளை உருவாக்கியவர்!

தூங்க விடாமல் செய்வதே கனவென்றவர்!

தூங்கிவிட்டார் நம்மைவிட்டு சென்று விட்டார்!

இராணுவ விமானங்களில் பயணித்தவர்!

அணுவளவும் அச்சம் என்றும் கொள்ளாதவர்!

உயர்ந்த விருதுகள் பல பெற்றபோதும்

உயரமாக தன்னை என்றும் கருதாதவர்!

கோடிக்கணக்கான மாணவர்களை சந்தித்தவர்!

கோடிக்கும் பணத்திற்கும் என்றும் ஆசைப்படாதவர்!

செம்மையாக வாழ்ந்து காட்டிய தமிழர்

செந்தமிழர் திறனை உலகிற்கு உணர்த்தியவர்!

அக்னிச் சிறகுகள் எழுதி சாதித்தவர்

அக்னியை மனதிற்குள் விதைத்தவர்!

அமெரிக்கா நாசா அழைத்திட்ட போதும்

அன்போடு இந்தியாவிலேயே இருந்து வென்றவர்!

சென்ற இடமெல்லாம் உலகப் பொதுமறையை

செப்பாமல் இருந்ததில்லை அவர் !

திருக்குறளை உச்சரிப்பதோடு நின்றிடாமல்

திருக்குறள் வழி வாழ்ந்திட்ட நல்லவர் !

தோன்றின் புகழொடு தோன்றி நின்றவர் !

தோல்விக்கு துவளாத உள்ளம் பெற்றவர் !

நேர்மைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்

நேர்மையில் சமரசம் செய்து கொள்ளாதவர் !

இந்தியா தவிர வேறுநாட்டில் பிறந்திருந்தால்

இவரை வாழ்நாள் குடியரசுத்தலைவராக்கி இருப்பர் !

இரண்டாம் முறை குடியரசுத்தலைவராக்காமல்

இரண்டாம் தர அரசியல் செய்தனர் !

தன்னம்பிக்கையை மாணவர்களிடம் விதைத்தவர் !

தன்னிகரில்லா மாமனிதராகச் சிறந்தவர் !

வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவர் !

வையகம் போற்றும் மாமனிதர் !

உலக அரங்கில்நாட்டின் மதிப்பை உயர்த்தியவர் !

உலகம் மதித்திடும் ஒப்பற்ற மனிதர் !

ஆசிரியர் பணியே அறப்பணி என்றவர் !

அதற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் !

கேள்விகள் கேட்க வைத்து விடையளித்தவர் !

கேள்விகளே அறிவை வளர்க்குமென நம்பியவர் !

எடை குறைவான செயற்கைக் கால்களில் நடப்பதை

என்று கண்டோரே அதனை மகிழ்வான தருணமென்றவர் !

மாணவர்களிடம் உரையாற்றும்போதே

மனம் விரும்பியபடி மரணித்தவர் !

மரணத்திற்கு என்றுமே அஞ்சாதவர் !

மரணத்தை வரலாறு ஆக்கியவர் !

இவர் போல யாரு உலகம் சொல்லும் !

‘இவருக்கு இணை இவரே’ உலகம் உரைக்கும் !

யார் இறந்தாலும் ஈடுசெய்ய முடியா இழப்பு என்போம் !

இவர் இறந்தது உண்மையில் ஈடுசெய்ய முடியா பேரிழப்பு !

உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும்

உள்ளங்களில் மக்கள் உள்ளங்களில் வாழ்பவர் !

.ஆகலாம் கலாம் !
கவிஞர் இரா. இரவி
மாணவ மாணவியரிடம் அன்பு செலுத்தி
மனித நேயம் விதைத்தால் ஆகலாம் கலாம் !

சக மனிதனின் கருத்துக்கு மதிப்பளித்து
சகோதரனாய் நினைத்தால் ஆகலாம் கலாம் !

ஏழ்மைக்கு வருந்தாமல் உழைத்தால்
எல்லோரும் ஆகலாம் கலாம் !

மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டால்
மண்ணில் அனைவரும் ஆகலாம் கலாம் !

குழந்தையைப் போல உள்ளம் கொண்ட
குவலயத்தில் எல்லோரும் ஆகலாம் கலாம் !

ஆடம்பரத்தை வெறுத்து எளிமையை
அனைத்திலும் கடைபிடித்தால் ஆகலாம் கலாம் !

தலைக்கனம் இன்றி அனைவரிடமும்
தன்மையாக நடந்தால் ஆகலாம் கலாம் !

உயர்பதவி அடைந்த போதும் என்றும்
உள்ளத்தில் செருக்கின்றி வாழ்ந்தால் ஆகலாம் !

வாய்மை, நேர்மை, உண்மை மூன்றும் இருந்தால்
வையகத்தில் நீங்களும் ஆகலாம் கலாம் !

திருக்குறள் படிப்பதோடு நின்று விடாமல்
திருக்குறள் வழி வாழ்ந்தால் ஆகலாம் கலாம் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

News

Read Previous

உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் !

Read Next

மரம் நடும் விழா

Leave a Reply

Your email address will not be published.