கருணை
உலகுக்கே உணவளிக்கும் உழவனுக்கும் ஊக்கமூட்டுவோம்!
வாயில்லா உயிரினங்களையும்
வாஞ்சையுடன் வருடுவோம்!
வாழ்க்கைத்துணையுடனான
வருத்தத்தையும்திருத்தி வாழ்வை வண்ணமயமாக்குவோம்!
மக்கள்செல்வங்களுக்கு செல்வங்களைவிட மக்களேமேண்மையென முன்மொழிவோம்!
அவசரவேளையிலும் அவசரஊர்திக்கு வழிபாட்டுடன் வழியும்விடுவோம்!
நெரிசலில் இயலாதவருக்கும்
நெறியாளனாய் இருக்கைகொடுப்போம்!
சமூகவலைதளங்களல்லாது
சமூகத்துடனும் சுமூகமாக நேரத்தைச் செலவிடுவோம்!
இயற்கைச்சீற்றங்களின் இன்னல்களையும் ஈகைக்கரங்களால் களைவோம்!
பணிவிடைபுரியும் பணியாளர்களிடமும் பணிவன்புடன் பாசத்தைப்பொழிவோம்!
பெற்றோரையும் பெற்றமொழியையும் பெறுமையோடு பறைசாற்றுவோம்!
பிள்ளைகளின் பிழைகளை பொறுக்கும் பெற்றோர்களாக மாற்றுவோம்!
யாதும்ஊரே யாவரும்கேளிரென்ற உண்மை உரைப்போம்!
– அபிநயா,துபாய்.
Tags: கருணை