கருணை
அன்னைதெரேசாவின்
புன்னகையில் வாழ்ந்தேன்!
அண்ணல்காந்தியின்
அகத்தில் வளர்ந்தேன்!
காமராசரின் குணத்தில்
கலந்து தவழ்ந்தேன்!
அப்துல்கலாமின் அறிவில்
இணந்து பணியாற்றினேன்!
கஷ்டப்படுவோருக்குக்
கண்ணீரைத் துடைப்பேன்,
பசிக்கு உணவளிப்பேன்,
உடுக்க உடைகொடுப்பேன்,
நோய்க்கு மருந்தளிப்பேன்,
கவலைகளுக்குத் துணிவாவேன்,
கலக்கத்திற்குத் தெளிவாவேன்,
அள்ளஅள்ளக் குறையாத,
ஆழமான கடல்நான்!
கொட்டினாலும் வற்றாத
நீரருவிநான்!
அனைவரையும் மகிழ்வித்துப்
பார்ப்பேன்,
ஏழையின்சிரிப்பில் இறைவனைக் காண்பேன்!
என்பெயர் கருணை!!!!
காரைக்குடி.ஃபாத்திமாஹமீத்
ஷார்ஜா.
Tags: கருணை