கதவடைப்பு
கதவடைப்பு
– அரிஅரவேலன்
காலடி மண்ணும்
கண்ணுக்குத் தெரியக்கூடாதென்று
சுற்றுக்கல் பாவிய வீட்டின்
வலசைக் கதவை எக்கிப் பிடித்து
தோளில் மண்வெட்டி தொங்க
தோட்டவேலை கேட்கிறார்
70அகவை முதியவர்
அக்கதவின் தாழ்ப்பாளை
ஆட்டி அழைத்து
ஒரு கட்டு அகர்பத்தியை
ஓர் உருபாய்க்காவது வாங்கும்படி
கம்மிய குரலில் இரைஞ்சுகிறார்
கைக்கோலை தரையில் தட்டியே
பத்து கிலோமீட்டர் கடந்தவந்த
50 அகவை விழியற்ற கிழவர்
ஒரு கையில் 3அகவைச் சிறுமியும்
மறுகையில் கொஞ்சம் காசுகளும்
சூல்கொண்ட வயிறுமாய் வந்து
அக்கதவினைத் தட்டிய குடும்பத்தலைவி
பொங்கும் கண்ணீரோடு கேட்கிறார்
பிழைப்பிற்கு வீட்டுவேலையும்
பிள்ளைக்கும் நோயுற்ற கணவனுக்கும்
இன்று ஆக்கிக்கொடுக்க
கொஞ்சம் அரிசியும் கிழங்கும்
அக்கதவை நெருங்கி
குரல் கொடுக்கக் கூசிய பாட்டி
தெருவில் ஊர்ந்துகொண்டே
கதவிடுக்கில் கண்களால் துழாவுகிறார்
யாரேனும்
தனது நிலையைக்கண்டு இரங்கி
சில நாணயங்களேனும்
தருவார்களா என்று
தம்பிக்கும் தங்கைக்கும்
தின்பண்டம் வாங்கிக்கொடுக்க
அக்கதவில் தாளம்போட்டு
வேலைகேட்கிறார்
நேரலை வகுப்பில்
பாடங்கற்கவாய்ப்பற்ற
11 அகவைப் பள்ளிச்சிறுவர்
அக்கதவின் அப்பக்கம்
வீட்டிலிருந்து
நாளும் 12 மணிநேரம்
உழைப்பதால் கிடைக்கும்
வெட்டுவிழுந்த சம்பளத்தில்
வீட்டுக்கடன் தவணை
மின்சாரக்கட்டணம்
பெற்றோருக்கு மருந்து
பிள்ளைக்குக் கல்வி
ஐவருக்கும் அரைவயிற்று உணவு
ஆகிய அனைத்திற்கும்
ஒதுக்கிய பின்னர்
மீந்த பணத்தை
கதவடியில் கேட்கும் குரலுக்கும்
கதவிடுக்கில் நுழையும் பார்வைக்கும்
பகிர்ந்துகொடுக்கும்
அவளும் அவனும் பார்த்த
தொலைக்காட்சியில்
பேசிக்கொண்டிருந்தார்
நாட்டின் தலைமை அமைச்சர்
“கைதட்டி, விளக்கேற்றி, பூத்தூவி
மகுடைப் பெருந்தொற்றை
நாங்கள் வெல்வதைக் கண்டு
வியக்கிறது உலகு!”
கதவடைப்பு
– அரிஅரவேலன்
காலடி மண்ணும்
கண்ணுக்குத் தெரியக்கூடாதென்று
சுற்றுக்கல் பாவிய வீட்டின்
வலசைக் கதவை எக்கிப் பிடித்து
தோளில் மண்வெட்டி தொங்க
தோட்டவேலை கேட்கிறார்
70அகவை முதியவர்
அக்கதவின் தாழ்ப்பாளை
ஆட்டி அழைத்து
ஒரு கட்டு அகர்பத்தியை
ஓர் உருபாய்க்காவது வாங்கும்படி
கம்மிய குரலில் இரைஞ்சுகிறார்
கைக்கோலை தரையில் தட்டியே
பத்து கிலோமீட்டர் கடந்தவந்த
50 அகவை விழியற்ற கிழவர்
ஒரு கையில் 3அகவைச் சிறுமியும்
மறுகையில் கொஞ்சம் காசுகளும்
சூல்கொண்ட வயிறுமாய் வந்து
அக்கதவினைத் தட்டிய குடும்பத்தலைவி
பொங்கும் கண்ணீரோடு கேட்கிறார்
பிழைப்பிற்கு வீட்டுவேலையும்
பிள்ளைக்கும் நோயுற்ற கணவனுக்கும்
இன்று ஆக்கிக்கொடுக்க
கொஞ்சம் அரிசியும் கிழங்கும்
அக்கதவை நெருங்கி
குரல் கொடுக்கக் கூசிய பாட்டி
தெருவில் ஊர்ந்துகொண்டே
கதவிடுக்கில் கண்களால் துழாவுகிறார்
யாரேனும்
தனது நிலையைக்கண்டு இரங்கி
சில நாணயங்களேனும்
தருவார்களா என்று
தம்பிக்கும் தங்கைக்கும்
தின்பண்டம் வாங்கிக்கொடுக்க
அக்கதவில் தாளம்போட்டு
வேலைகேட்கிறார்
நேரலை வகுப்பில்
பாடங்கற்கவாய்ப்பற்ற
11 அகவைப் பள்ளிச்சிறுவர்
அக்கதவின் அப்பக்கம்
வீட்டிலிருந்து
நாளும் 12 மணிநேரம்
உழைப்பதால் கிடைக்கும்
வெட்டுவிழுந்த சம்பளத்தில்
வீட்டுக்கடன் தவணை
மின்சாரக்கட்டணம்
பெற்றோருக்கு மருந்து
பிள்ளைக்குக் கல்வி
ஐவருக்கும் அரைவயிற்று உணவு
ஆகிய அனைத்திற்கும்
ஒதுக்கிய பின்னர்
மீந்த பணத்தை
கதவடியில் கேட்கும் குரலுக்கும்
கதவிடுக்கில் நுழையும் பார்வைக்கும்
பகிர்ந்துகொடுக்கும்
அவளும் அவனும் பார்த்த
தொலைக்காட்சியில்
பேசிக்கொண்டிருந்தார்
நாட்டின் தலைமை அமைச்சர்
“கைதட்டி, விளக்கேற்றி, பூத்தூவி
மகுடைப் பெருந்தொற்றை
நாங்கள் வெல்வதைக் கண்டு
வியக்கிறது உலகு!”
அன்புடன்,
அரிஅரவேலன்
http://ariaravelan.blogspot.in