ஓலைச்சுவடியில் தமிழ்ப்புத்தாண்டு

Vinkmag ad

ஓலைச்சுவடியில் தமிழ்ப்புத்தாண்டு
=================================================ருத்ரா

விசும்பின் விரியிழைத் தோகையன்ன‌

மஞ்சின் வரிகொடு ஓவுபல காட்டி

விடியல் இன்று கலித்தே ஆர்த்தது.

குரல்கதிர் பரிதி கடல் எனும் பழனம்

உழுதது கண்டே நனிகளி உற்று

நனந்தலைப் படப்பை நடந்தேன் ஆங்கு.

அலவன் வரிய மயிரிய மணற்கண்

எழுதிய போன்ம் எழுத்துக்கள் ஊர‌

கண்டேன் “தமிழ் வாழிய” என்றே!

ஆழிமகள் அடியொற்றித் தந்த‌

அனிச்சம் தூவிய மென்னகை அலையும்

அழிக்க ஒண்ணா அன்பொடு தடவி

வாழ்த்தும் வாழ்த்தும் ஈண்டு ஓர்

“தமிழ்ப்புத்தாண்டு! தமிழ்ப்புத்தாண்டு!”அஃதின்

விண் இமிழ் நுண் ஒலி எங்கணும் கேட்கும்.

கேள்மின்!கேள்மின்! மின் தமிழ் நண்பர்காள்!

மண்ணும் விண்ணும் மற்றும் எல்லா

மலர்தலை உலகம் யாவும் இது கேட்கும்.

தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!

தமிழ் என்றென்றும் வாழ்கவே!

News

Read Previous

நூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்

Read Next

தோஹாவில் இலவச பல் மருத்துவ முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *