ஒரு ரோஜாப்பூ போதும்!
ஒரு ரோஜாப்பூ போதும்!
============================== ===================ருத்ரா
வேலன்டைன் சுநாமி
அதோ வந்து விட்டது!
புழு பூச்சிகள் கூட
வண்ண மயில்கள் ஆகிவிட்டன.
உதிக்கும் சூரியனும்
கண்ணடித்துக்கொண்டு
நம் முகத்தில்
கண்ணாடி பார்த்து சிரிக்கின்றான்.
பதினாலு எனும் அக்கினி ஆற்றின் குறுக்கே
பதினெட்டுகள் கூட தொண்டு கிழம் தான்.
இப்போதைய
“நேனோ” செகண்டின் பின்னே
பிந்திய நேனோ செகண்டும் கூட
நரைத்துப்போன பெரிசு தான்.
முன்னைக்கும் முன்னே
முந்தி வருவது
முத்துக்கள் சிதறும்
இனிய வேலண்டின் தான்.
காதல் மின்சாரமே இந்த
மண்ணின் சாரம்.
மண் புழுக்கள் கூட
காதல் விவசாயத்தில்
ஒரு அறுவடைக்கு நெளிந்தோடும்.
டீன் வயதுகளை
சோப்புக்குமிழி ஊதிப்பார்த்து
அந்த மில்லியன் ஆண்டு எரிமலைகள் கூட
ஜொள் விட்டு
குலுங்கிக்கொள்ளும் அழகே அழகு.
ஒரு ரோஜாப்பூ போதும்!
கோடி டன் பாறாங்கல் துன்பங்கள்
தூளாய் பறக்க!
பரவசம் கொள்வோம்!
பல் நற நறக்கும்
பச்சைக்குருதியை
பன்னீர்த் தூறலாக்குவோம்.
காதல் வாழ்க!
============================== ================ருத்ரா
Tags: ரோஜாப்பூ