ஏனிந்தக் கோபம்
ஏனிந்தக் கோபம்?
யார்கொடுத்த சாபம்?
இப்படியோரு தாக்கம்!
இதுதானா தீர்க்கம்?
தண்ணீர்ப் பிரச்சினையென்று
மனுகொடுத்தோம் மந்திரியிடம்,
தண்ணீரே பிரச்சினையானால்
யாரிடம்சென்று மன்றாடுவோம்?
கூடுதலாக மரங்களை
நட்டுவிட்டோமா?
வேரோடு சாய்த்துத்தான்
பழிதீர்ப்பாயா?
இயற்கைக்கு ஏனோ
இரக்கம் வற்றியது!
கருணை காட்டாமல்
கரைகடந்து வந்தது!
இழந்த உயிர்களை-உன்னால்
ஈட்டுத்தர முடியுமா?
சீரழிந்த வாழ்வைத்தான்
செப்பனிடத்தான் முடியுமா?
மழையே! மௌனமாக
மேகங்களாகிவிடு-இல்லையேல்
அளவோடுபெய்து அமிர்தமாகிவிடு!
காரைக்குடி. பாத்திமா ஹமீத்
ஷார்ஜா
Tags: கோபம்