எல்லையில்லா மகிழ்ச்சியுடன் எங்குமே திரிகிறது !

Vinkmag ad
 எல்லையில்லா மகிழ்ச்சியுடன் எங்குமே திரிகிறது  ! 
 
     மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. ஆஸ்திரேலியா

முதலாளி அழுகின்றார் முதல்முடங்கிப் போச்சென்று 

           தொழிலாளி அழுகின்றார் தொலைந்தது தம்வாழ்வென்றும் 
           அழுகின்றார் தொடர்ந்தே  அழுதபடி இருங்களென்று
           சீனாவின் சொத்து சிரித்தபடி திரிகிறது  ! 
 
            பள்ளிக்கல்வி குலைந்ததென்று படிக்கின்றார் அழுகின்றார்
            துள்ளியாடும் கலைஞரெல்லாம் துயருடனே உழலுகிறார் 
            அள்ளியள்ளி மனிதவுயர் அபகரிக்கும் கொரனோவோ 
            அதிகார தோரணையில் அரசாட்சி செய்கிறது ! 
 
            விவசாயம் போச்சென்று விவசாயி வெதும்புகிறான் 
            வியாபாரம் தொலைந்ததென்று வியாபாரி கலங்குகிறான் 
            நலமழிப்ப தொன்றேதான் தன்விருப்பு எனக்கொண்டு 
            நாடுகளைக் கொரனோவும் நலிவடையச் செய்கிறது   ! 
 
            வல்லரசு எனச்சொன்னார் வகையறியா திகைக்கின்றார்
            வெல்லுவோம் என்றுரைக்க முடியாமல் தவிக்கின்றார் 
            கொல்லுதலைக் குறிக்கோளாய் கொண்டிருக்கும் கொரனோவோ 
            எல்லையில்லா மகிழ்ச்சியுடன் எங்குமே திரிகிறது  ! 

 

News

Read Previous

உங்களின் சிறந்த நண்பர்

Read Next

புன்னகை கொண்டு வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *