எல்லையில்லா மகிழ்ச்சியுடன் எங்குமே திரிகிறது !
எல்லையில்லா மகிழ்ச்சியுடன் எங்குமே திரிகிறது !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. ஆஸ்திரேலியா
முதலாளி அழுகின்றார் முதல்முடங்கிப் போச்சென்று
தொழிலாளி அழுகின்றார் தொலைந்தது தம்வாழ்வென்றும்
அழுகின்றார் தொடர்ந்தே அழுதபடி இருங்களென்று
சீனாவின் சொத்து சிரித்தபடி திரிகிறது !
பள்ளிக்கல்வி குலைந்ததென்று படிக்கின்றார் அழுகின்றார்
துள்ளியாடும் கலைஞரெல்லாம் துயருடனே உழலுகிறார்
அள்ளியள்ளி மனிதவுயர் அபகரிக்கும் கொரனோவோ
அதிகார தோரணையில் அரசாட்சி செய்கிறது !
விவசாயம் போச்சென்று விவசாயி வெதும்புகிறான்
வியாபாரம் தொலைந்ததென்று வியாபாரி கலங்குகிறான்
நலமழிப்ப தொன்றேதான் தன்விருப்பு எனக்கொண்டு
நாடுகளைக் கொரனோவும் நலிவடையச் செய்கிறது !
வல்லரசு எனச்சொன்னார் வகையறியா திகைக்கின்றார்
வெல்லுவோம் என்றுரைக்க முடியாமல் தவிக்கின்றார்
கொல்லுதலைக் குறிக்கோளாய் கொண்டிருக்கும் கொரனோவோ
எல்லையில்லா மகிழ்ச்சியுடன் எங்குமே திரிகிறது !