எண்ணத்தில் தூய்மை
எண்ணத்தில் தூய்மை
இதழ்களில் வாய்மை
மண்ணைப்போல் பொறுமை
மனத்தெழு யிச்சை
விண்ணைப்போல் உயர்ந்து நோக்கி
வேற்றுமைத் தீயைப் போக்கி
கண்ணுக்கி மைபோல் இனத்தைக்
காத்துக் களத்தில் வெல்வாய்!
எளிமையான கனவுகளால்
இலக்கை எட்டு
எதிரியை அன்புக் கயிற்றில் கட்டு
தெளிவான எண்ணம் கொண்டு
தெரிவு செய்தால் வெற்றி உண்டு
வளமான ஒழுக்கத்தில் செல்வாய்
களத்தினில் நீதானே வெல்வாய்!
ஆக்கம்:
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
Tags: தூய்மை