எங்கிருந்தாவது ஒரு புயல்

Vinkmag ad
எங்கிருந்தாவது ஒரு புயல்
======================================ருத்ரா
அது
வானத்திலிருந்து வந்து
விழுந்த‌
சுத்தமான ஒலித்துண்டுகள்
என்றார்கள்.
ஒலி என்றால்
அதை ஏற்படுத்திய‌
குரல் வளையின் தசைநார்கள்
யாருடையது
என்ற கேள்விகள் எழுந்தன.
கேள்விகள் கேட்டு
எச்சில் படுத்தாதீர்கள்
என்றார்கள்.
அது
மனித செவிகளுக்குள்
நுழைவதும்
மறுபடியும்
மனித நாக்குகளின்
உமிழ்நீர் தோய்ந்து
குரலாக வெளிவருவதும்
தீட்டோ தீட்டு என்றார்கள்.
அப்படியென்றால்
அது
எவ்வளவு புனிதம் வாய்ந்ததாய்
இருக்கவேண்டும்?
மனிதர்கள்
அதை “அறிவு”ப்புலன் கொண்டு
ஸ்பர்சிப்பதே
ஆபாசம் என்றார்கள்.
அதை “அஸ்பர்ஸ்யோகம்” என்று
ஒரு மாண்டூக ரிஷி
வறள வறள மந்திரம் சொன்னான்.
அது
அப்படியே
எங்கே எல்லாமோ போனது.
உள்ளூர்க்காரன்
அர்த்தம் தேடவே
பயந்தார்கள்.
வெளிதேசக்காரர்கள்
அந்த வெங்காயத்தோல்
உரித்தார்கள்.
இப்போது எல்லாம் புரிந்தது.

News

Read Previous

சுற்றுச்சூழலுக்கிசைந்த உயிரியல் உலை

Read Next

கரையும் கடலும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *