உழைப்பு
விழுப்புண் போலவே விழுமுன் மேனியில்
உழைப்பின் வடுக்களை உணர்ந்தால் நித்தமும்
விழைந்து மகிழ்வாய் விஞ்சிடும் உழைப்பால்!
அழைக்கும் மரணம் அழைக்கும் வரைக்கும்
உழைக்கும் அரிய உணர்வால்
தழைக்கும் செல்வமும்
தரணி போற்றவே!
மழைத்துளி கண்ட மரங்களைப் போல
செழித்திடும் வாழ்க்கைச்
சிறப்புடன் மிளிர்வதை
உழைப்பினால் கண்ட உயர்வென அறிவாய்!
-அதிரை கவியன்பன் கலாம், துபை.
Tags: உழைப்பு