உலக மகிழ்ச்சி தினம்
உலக மகிழ்ச்சி தினம்
எத்தனை கோடி பணமிருந்தாலும்எத்தனை சொத்துக்கள் சேர்த்திருந்தாலும்எத்தனை சொந்தங்கள் நிறைந்திருந்தாலும்எத்தனை பதவிகள் வகித்திருந்தாலும்
எத்தனை விருதுகள் பெற்றிருந்தாலும்எவ்வளவு புகழ் அடைந்திருந்தாலும்
அவ்வளவும் வீணாகிடும் மனதில்எள்ளளவு மகிழ்ச்சி இல்லையெனில் .நம்மைப் பிறரோடு ஓப்பிடாமல் ,நம்மிடம் இருப்பதே போதுமென்றும்நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்திடும்போதும்நம்முள் மகிழ்ச்சி நிறைந்திடுமே .
பிறர்க்குதவுதலில் மகிழ்ச்சி யுண்டு
உறுபசி தீர்த்தலில் மகிச்சியு ண்டு .
கற்றற்குதவுதலில் மகிச்சியுண்டு .
உறுபிணி தீர்த்தலில் மகிழ்ச்சி யுண்டு .
உயிர்காத்தலில் மகிழ்ச்சியுண்டு .
ஆதரவற்றோர்க்குதவுதலில்
ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியுண்டு.
பிறர் மனம் புண்படாமல் ,இன்சொல்
பேசி, நடத்தலில் மகிழ்ச்சியுண்டு .
சாதி, இனம், மொழி , மதமென்றுவேற்றுமை எதிலும் பாராமல் ,ஏழை, பணக்காரன் எனும்ஏற்றத்தாழ்வுகள் பாராமல் ,மனித இனத்தோர் அனைவரையும்மனதில் சமமாய் நினைத்தபடிநீதி நெறிப்படி வாழ்வதில்தான்
நெஞ்சில் மகிழ்ச்சி நிறைந்திடுமே .மகிழ்ச்சி எங்கே உள்ளதென்றுமற்றவை எதிலும் தேடாதீர் .மகிழ்ச்சி மனதில் இருந்துவிட்டால்மற்றவை எல்லாம் மகிழ்வாகும் .
மகிழ்ச்சியுடன் ,சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்20.03.2020 .
Tags: உலக மகிழ்ச்சி தினம்