உலக சகோதரர்கள் தினம்
உலக சகோதரர்கள் தினம்
பூமித்தாயின் உதரத்தில்
பிள்ளைகளாக அவதரித்த
நாமெல்லோரும் சகோதரரே நாளும் மனதில் வைத்திடுவோம் .
சுயலாபத்திற்காக சிலர் சுயமாய் சிந்திக்க விடாமல்
சாதி, இனம் ,மொழி,மதமென்று ,
சதியால் நம்மைப் பிரித்திடுவார்.
சதிவலைதன்னை அறுத்திடுவோம்,
பிரிவினை வாதம் வெறுத்திடுவோம்.
எழுநூறு கோடி மக்களிடம் எவ்வித பிரிவும் இல்லையெனில்,
எங்கும் இல்லை ஒரு கலகம்
எழுச்சி காணும் இவ்வுலகம்.
கதிரும்,மதியும் ,காற்றும் மழையும் ,
எதுவும் நம்மைப் பிரிப்பதில்லை.
மதியால் இதனை உணர்ந்தாலே
மனதில் பேதம் தோன்றாதே.
வசுதேவ குடும்பகம் என்று
வழிகாட்டிய நம் முன்னோர்கள்
வழியே நாமும் செல்வதனால்
வளமும் நலமும் மேம்படுமே.
சகோதரத்துவத்துடன்,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
24.05.2021.