உலக சகோதரர்கள் தினம்

Vinkmag ad

உலக சகோதரர்கள் தினம்

பூமித்தாயின் உதரத்தில்
பிள்ளைகளாக அவதரித்த
நாமெல்லோரும் சகோதரரே நாளும் மனதில் வைத்திடுவோம் .
சுயலாபத்திற்காக சிலர் சுயமாய் சிந்திக்க விடாமல்
சாதி, இனம் ,மொழி,மதமென்று ,
சதியால் நம்மைப் பிரித்திடுவார்.
சதிவலைதன்னை அறுத்திடுவோம்,
பிரிவினை வாதம் வெறுத்திடுவோம்.
எழுநூறு கோடி மக்களிடம் எவ்வித பிரிவும் இல்லையெனில்,
எங்கும் இல்லை ஒரு கலகம்
எழுச்சி காணும் இவ்வுலகம்.
கதிரும்,மதியும் ,காற்றும் மழையும் ,
எதுவும் நம்மைப் பிரிப்பதில்லை.
மதியால் இதனை உணர்ந்தாலே
மனதில் பேதம் தோன்றாதே.
வசுதேவ குடும்பகம் என்று
வழிகாட்டிய நம்  முன்னோர்கள்
வழியே நாமும் செல்வதனால்
வளமும் நலமும் மேம்படுமே.
சகோதரத்துவத்துடன்,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
24.05.2021.

News

Read Previous

ஆண் பெண்

Read Next

பேராசிரியர் தொ. பரமசிவன் நினைவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *