உலகாள்வோம் உயிர்த் தமிழால்
உலகாள்வோம் உயிர்த் தமிழால்
சகமெங்கும் நிலைத்திட்ட பொங்குதமிழ் —-அன்று
சங்கம்பல கண்டிட்ட மதுரதமிழ்
அகத்துடன் புறம்தந்த தீந்தமிழ் —–என்றும்
அணியாக நிலைத்திட்ட பைந்தமிழ்
இன்பமுடன் நாம் தமிழை படித்திட்டால் ––இனி
உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !
காவியம்பல தந்திட்ட முத்தமிழ் —நமக்குள்
கவிகள்பல புகுத்திட்ட பூந்தமிழ்
கவிபாட இனித்திட்ட தேன்தமிழ் –நம்மையெல்லாம்
கவிஞனாய் இங்கு பாடவைத்த அருந்தமிழ்
இன்பமுடன் நாம் தமிழை படித்திட்டால் ––இனி
உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !
தமிழ்த்தாயைத் தாலாட்டும் பத்துப்பாட்டு—எங்கும்
தமிழ்மொழியை வளர்க்கின்ற எட்டுத்தொகை
தமிழ்த்தாய்க்கு புகழ்சேர்க்கும் பதிநெண்கீழ்கணக்கு-நித்தம்
தமிழ்மொழியும் வளர்கிறது குறுந்தொகையால்!
இன்பமுடன் நாம் தமிழை படித்திட்டால் ––இனி
உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !
இவ்வுலகம் போற்று மின்னாநாற்பது —தமிழ்
இன்பத்தேனாய் இனிக்கிறது இனியவைநாற்பதால்
ஏற்றம்பெற்றாள் தமிழ்த்தாயும் ஏழுசீரால் —குறளுடன்
எட்டாவது அதிசயமே தமிழில்தானே!
இன்பமுடன் நாம் தமிழை படித்திட்டால் ––இனி
உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !
குறள்நதி
திருவேற்காடு
கைபேசி 9941648450