உயிரை மீட்டுத் தா இறைவா
உயிரை மீட்டுத் தா இறைவா
————————————-
(27-10-2019).
இரண்டு வயது சிறுவன் சுர்ஜித்
இரண்டு நாட்களாய்
இருள் சூழ்ந்த குழியில்
இனம் புரியா பயத்தில்
என்னதென்று சொல்லத் தெரியாமல்
என்ன நடக்கிறது என்று அறியாமல்
எத்தனை நேரம் இப்படி அசையாமல்
எப்படித்தான் இருப்பது…?கொடுமை
உள்ளங்கள் அழுகிறது இறைவா
உயிரை மீட்டுத்தா இறைவா
இதயங்கள் கனக்கிறது இறைவா
இரக்கம் காட்டு இறைவா
பெற்றமனமும். பேதலிக்கிறது
பெரும் கூட்டமும் பரிதவிக்கிறது
பெரும் பிழை பொறுத்தருள் இறைவா
பேதையர் மனம் குளிரச் செய் இறைவா
முயற்சியை முன்னெடுக்கிறோம்
முடிவை நலமாக்கு இறைவா
மொட்டவிழா மலர் சிறுவனை
மொத்தமாய் தந்திடு இறைவா
கண்ணீரில் கடிதம் அனுப்புகிறோம்
கதிகலங்கி நிற்கிறோம்
கரங்கள் ஏந்தி தொழுகிறோம்
கருணை காட்டிடு எம் இறைவா
மு முகமது யூசுப். உடன்குடி
Tags: இறைவா