இரவு தேவதை

Vinkmag ad

இரவு தேவதை
இரா சத்திக்கண்ணன்
——————————————-
அந்தி சாயும் நேரம்
வண்ணங்கள் வழி
நாணத்துடன்
பவனி வருகிறாள்
தன் வெளிச்ச உதடுகளை
மூடியபடி
மௌனமாய் வருகிறாள்
கறுப்பழகியவள்
பிறை சூடியன்றோ
கிரங்கடிக்கிறாள்
வெளிச்ச வரங்கள்
தந்து
வசியம் செய்கிறாள்
நட்சத்திரக் கவிச்சுடரில்
தீயாய்
ஜொலிக்கிறாள்
வெண் நுரைகளை
கால்களில் அணிந்து
நர்த்தனமாடுகிறாள்
கடலலைகளில்
அவளின்
தழுவல்களில்
பூமி அழகாகிறது
அதிகாலைப்
பனித்துளிகளில்
வண்ணமாய் மிளிர்கிறாள்
இதயத்தில் நிறைகிறாள்
இரவு தேவதை!!

 

News

Read Previous

முதலமைச்சர் வீட்டில் ரேசன் அரிசியா!!!!

Read Next

ஆவாரம்பூ கஷாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *