இமைகளே … திறவுங்கள் !

Vinkmag ad

 

கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்

 

வாழ வாழ நல்ல வழிகளுண்டு – நபி

வழங்கிய நெறிகளிலே

வாரி வாரித் தந்த வைரமுண்டு – அவர்

வாய்மலர் மொழிகளிலே – நாம் …

-வாழ வாழ

ஒன்றே தேவன் ஒன்றே மார்க்கம்

ஓர் குலமென்னும் நீதியை

நன்றே உணர்ந்து நேர்மையில் உயர்ந்து

நானில வாழ்வின் நன்மைகள் தெரிந்து …

-வாழ வாழ

இறப்பதற்கென்றே பிறந்தோம் இங்கே

இதனை மறந்ததும் நேர்மையா ?

பொறுப்புடன் நடந்து பேரருள் சுமந்து

பேதங்கள் இன்றி யாவரும் இணைந்து …

-வாழ வாழ

இழிவின் அடியில் இருளின் மடியில்

எத்தனை நாள் இங்கு வீழ்வது ?

அறிவின் துணையால் கண்களைத் திறந்து

ஐம்பெருங்கடமையைப் பேணி நடந்து …

-வாழ வாழ

மரணத்தின் பிடியில் கணவரை இழந்த

மங்கையர் தனிமையில் வாடியே

பருவம் சிதைந்து ஊர்பழி சுமந்து

பாழடையாமல் மறுமணம் புரிந்து …

-வாழ வாழ

 

 

 

News

Read Previous

ஜும்ஆ நாளின் சிறப்புகள்

Read Next

காகித பூங்கா அமைப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *