இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்!
இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்!
— இலக்குவனார் திருவள்ளுவன்
கலையாத வீரமும் குறையாத ஈரமும் ஓர்
களங்கம்வாராத தீரமும்
கன்றாத படைமையும் குன்றாத துணிவும்
நலிவிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத நட்பும்
தவறாத சொல்லும்
தாழாத எழுச்சியும் மாறாத புகழும்
தடைகள் வாராத செயலும்
தொலையாத பற்றும் கோணாத தலைமையும்
துன்பம் எதிர்கொள்ளும் பாங்கும்
இணைந்து வாழ்ந்த மாவீரர்கள்
இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்!