இக்கரைக்கு அக்கரைப் பச்சை
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் அலைபாயுமே மனோயிச்சை
சக்கரைக்கு எறும்பு எதிரிபோல
சந்தோசத்துக்கு எதிரி கவலை
சுதந்திர தாய்நாட்டில் சுகமுண்டு; செலவமில்லை
இயந்திர வாழ்வுதான் இங்கே
எல்லாம் உண்டு; நிம்மதி எங்கே?
எல்லார்க்கும் எல்லாமே
கிடைத்து விட்டால்……
இறைவனே இல்லை என்றே
சொல்லிவிடுவான் மனிதன்
சொற்ப வாழ்வே இப்படித்தான்
இல்லாரும் உள்ளாரும்
இணைந்து தானே
நில்லா உலகை
நிர்மாணிக்க வேண்டிய
நியதி…
நேற்று என்பது நினைவு;
நாளை என்பது கனவு;
இன்று மட்டுமே உண்மை
இதனையடைந்தால் நன்மை
அதிரை“கவியன்பன்” கலாம், அபுதாபி