ஆரஞ்சு மிட்டாய்
ஆரஞ்சு மிட்டாய்
============================== ===============ருத்ரா
யார் சொன்னது?
அறுபதை நோக்கிய
இருபதின் துருப்பிடித்த “வெர்ஷன்”கள்
வால்மீகியையும்
வியாசரையும்
அண்டை கொடுத்துக்கொண்டு
கிடக்கும் என்று?
நரைத்ததுகளின் “ளொள்ளு”
ரொம்பவே விறைப்பு தான்.
அந்த “108” ஆம்புலன்ஸை
நடிப்பின் வண்ண வண்ண வலிப்புகள் வரும்
பிருந்தாவனக்களம் அல்லவா ஆக்கியிருக்கிறார்
விஜய சேதுபதி.
மனித உளவியலின்
உள் பக்கங்களையே
டர் டர்ரென்று
“நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோமி”ல்
கிழித்தவர் ஆயிற்றே.
இதயத்துடிப்பின்
சிஸ்டாலிக் டையஸ்டாலிக் மர்மர்கள்
விஜய சேதுபதியின்
பக்கத்திலும் கக்கத்திலும் கவ்விக்கொண்டு
அவர் சொல்ற படியெல்லாம் துடிப்பதே
கதையின் உட்கதை.
“முதியோர்”என்றால்
ஏதோ ஒரு முதியோர் இல்லம் தான்
நினைவுக்கு வரவேண்டும்
என்று ஆகிவிட்ட
சமுதாயத்தின்
அந்த குப்பைத்தொட்டியைக்கூட
காதலே இல்லாமல்
தாஜ்மஹால் ரேஞ்சுக்கு
சினிமாத்தனத்தின் குறும்புகளோடு
சிலிர்க்க வைத்திருக்கிறார்
விஜய் சேதுபதி.
ஈடு கொடுத்த நடிகரின்
தோளிலோ பெரும் சுமை.
குறும்படம் எனும் ஒரு ஊசியை
ஒரு பனங்கட்டையில் குத்தி
மூச்சு முட்ட முட்ட தூக்கிவரும்
“ஒரு பரமார்த்திக குரு சீடர்” தன்மையை
காட்டினாலும்
அது ஒரு அற்புத கலைச்சுமையின்
நெடும்படம் தான்.
வெள்ளாவியில் வைத்து வெளிவந்த
கதாநாயகிகளோடு ஆட்டம் போட்டுத்தான்
“சிக்மண்ட ஃப்ராய்டை” நாம்
விசில் அடித்து வரவேற்க வேண்டும் என்றில்லை.
விஜய சேதுபதி கொஞ்சம்
ஆழமாய் லுக் விட்டால் கூட போதும்.
வார் வைத்த டவுசர் போட்ட காலத்தில்
திருட்டுத்தனமாய்
கருப்பட்டி டப்பாவிலிருந்து
இளகிய அந்த கருப்பட்டிக்குழம்போடு
புளியையும் உருட்டிச்சேர்த்து
குச்சியில் செருகி
சுவைத்தேனே
அதே அருஞ்சுவை தான்..
ஆரஞ்சு முட்டாய்.
============================== =============
Tags: ஆரஞ்சு மிட்டாய்