ஆசிரியர் தின வாழ்த்துகள்
ஆசிரியர் தின வாழ்த்துகள்
—————————————-
ஆரம்ப கல்வி முதல்
முதுநிலை கல்வி வரை
ஆசிரியர் என்ற
எத்தனையோ ஏணிகள்
ஏற்றிவிட்டதை இந்த
ஆசிரியர் தினத்தில்
நன்றியோடு
நினைக்கிறேன்…
கீழச்சிறுபோது
ஆரம்பப் பள்ளி
மேலச்சிறுபோது
நடுநிலைப் பள்ளி
முதுகுளத்தூர் பள்ளிவாசல்
உயர்நிலைப்பள்ளி
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே
மேல்நிலைப் பள்ளி
மதுரை மருத்துவக் கல்லூரி
சென்னை மருத்துவ கல்லூரி
எனது ஞான ஆலயங்கள்..
அதன் அனைத்து ஆசிரிய பெருமக்களும்
எனது தெய்வங்கள்…
“ஈவோன் தன்மை யீதலியற்கை
கொள்வோன் தன்மை கோடன் மரபு”
என்ற தொல்காப்பிய வரிகளுக்கு ஏற்ப
நான் கோடன் மரபாக இல்லாமல் இருந்திருக்கலாம்…
ஆனால்
எனது ஆசிரியர்கள் அனைவரும்
கல்வியை இயற்கையாக
கற்று கொடுத்த
ஈவோன் தன்மையாளர்கள்…..
அந்த அறுசுவை
அடுப்புத் தனலில் வெந்த
ஒரு சோறு பதம் நான்….
“அளக்கல் ஆகா அளவும் பொருளும்
துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வன்மையும் மலைக்கே”
அளவிடமுடியாத கல்வியறிவு பெற்ற
ஆசிரியர்கள் வலிமையான
மலைக்குச் சமம் ….
என்ற நன்னூலின்
வரிகளை வழிமொழிகிறேன்….
அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும்
ஆசிரியர் தின வாழ்த்துகள்…..
மேலும்
மாதா பிதா குரு தெய்வம் அல்ல
மாதா பிதா
தெய்வம் குருவே…
குரு வணக்கத்துடன்……
பா.திருநாகலிங்க பாண்டியன்
மதுரை மருத்துவக் கல்லூரி
மதுரை..