அவள் வருவாளா?

Vinkmag ad
அவள் வருவாளா?
=====================================ருத்ரா
அவள்
வருவாளா?
காத்திருந்தேன்
மெரீனா கடற்கரையில்.
ஒரு காகிதம் கிடைத்தது
சில சொற்களுடன்
என்னவோ காதல் சிற்பி
என்ற பெயரில்
யாரோ எழுதிய கவிதை.
என்னத்தை
எழுதியிருக்கப்போகிறான்.
அலட்சியமாக
அதை எறிய
சுருட்டிக்கசக்கினேன்.
அதிலிருந்து குப்பென்று
ஒரு மணம்!
ஆவலுடன் பிரித்தேன்.
ஆஹா!
அது தேங்கா மாங்கா பட்டாணி
சுண்டல் இருந்த மணம்.

News

Read Previous

எனக்கு எல்லாமும் நீ

Read Next

குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் பொருளீட்ட வந்த தொழிலாளர்கள் பிணவறையில் துயில் கொள்ளும் சோகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *