அர்த்தமே இல்லையே !
அர்த்தமே இல்லையே !
மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண்… அவுஸ்திரேலியா
கோடி கோடியாய் பணம் இருந்தாலும்
மாடி மாடியாய் மனை குவிந்தாலும்
வாடி நிற்பவர் மனம் அறியாதவர்
வாழும் வாழ்விலே அர்த்தமே இல்லையே
கோவில் கோவிலாய் சென்றுமே வணங்கினும்
குடம் குடமாய் பாலினைக் கொடுக்கினும்
வாய் இல்லாத சீவனை வதைப்பவர்
வாழும் வாழ்வினை மனதுதான் ஏற்குமா
வாதம் வாதமாய் மன்றிலே நிகழ்த்தியே
வழக்கை பணத்துக்காய் நீட்டியே நிற்பவர்
நீதி தேவனின் நெஞ்சிலே மிதிப்பவர்
நிம்மதி என்பது வாழ்வினில் நிலைக்குமா
பட்டம் பட்டமாய் பெற்றுமே நிற்பவர்
பதவி பெற்றுமே உயர்நிலை வகிப்பவர்
பெற்ற தாய்தந்தை பேணிடா நின்றிடின்
கற்ற கல்வியும் காறி உமுழுமே
Tags: மகாதேவஐயர் ஜெயராமசர்மா