“அருவி”
பெருகும் கண்ணீரால்
பெருங்கவி எழுதி
உருகும் எண்ணத்தை
உணர்த்திடும் அருவி!
உள்ளமதில் பாயும்
உணர்வுகளைக் கழுவி
வெள்ளமெனச் சீறி
விழும்கவிதை அருவி!
கன்னமதில் குழியுடன்
கள்ளமிலாக் குழவி
புன்னகையும் பொழிவது
பொய்மையிலா அருவி!
குற்றால அருவியிலே
குளித்ததும் நீங்கிவிடும்
வற்றாத மகிழ்ச்சியெலாம்
வளர்தமிழ் ஓரருவி!
“கவியன்பன்” கலாம்
kalamkader2@gmail.com