“அருவி”

Vinkmag ad
பெருகும் கண்ணீரால்
பெருங்கவி எழுதி

உருகும் எண்ணத்தை

உணர்த்திடும் அருவி!
உள்ளமதில் பாயும்
உணர்வுகளைக் கழுவி
வெள்ளமெனச் சீறி
விழும்கவிதை அருவி!
கன்னமதில் குழியுடன்
கள்ளமிலாக் குழவி
புன்னகையும் பொழிவது
பொய்மையிலா அருவி!
குற்றால அருவியிலே
குளித்ததும் நீங்கிவிடும்
வற்றாத மகிழ்ச்சியெலாம்
வளர்தமிழ் ஓரருவி!
 
“கவியன்பன்” கலாம்
kalamkader2@gmail.com

News

Read Previous

இணைய வழியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்

Read Next

முதல்வனும் நீயே அன்றோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *