அரசே ! இது நியாயமா ?.
அரசே ! இது நியாயமா ?.
ஊஹான் அளித்த கொரோனாவினால்
ஊரடங்கை அறிவித்தன அரசுகள் .
கடைகள் எதுவும் திறந்திடவில்லை
காய்கறி சந்தை செயல்படவில்லை
பள்ளி கல்லூரிகள் துவங்கவில்லை
போக்குவரத்தும் துவங்கவில்லை .
அலுவலகங்கள் செயல்படவில்லை .
ஆலயங்களும் திறந்திடவில்லை .
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில்
அரக்க மதுவை அரசினர் சேர்த்தார்
மதுக்கடை மட்டும் திறந்தது அரசு .
மதுபிரியர்களுக்கு மகத்தான பரிசு.
வாழ்வாதாரத்திற்கு ஆயிரம் கொடுத்து
அதனை மதுவிற்கு செலவிடவைத்து
போட்ட முதலை திரும்ப எடுக்க
விட்டதைப்பிடிக்க இது சூதாட்டமா
வருமானம் ஒன்றே குறிக்கோளாக
அவமான உணர்வு சிறிதுமின்றி
குடிக்க மதுவைக் கொடுக்கும் அரசு
குடிமக்களுக்கா ? , குடிமகன்களுக்கா ?
பேய்கள் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்
பாரதி சொன்னது பலிக்குது இன்று .
குமுறலுடன் ,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்