அய்லனுக்கோர் அஞ்சலி !
அய்லனுக்கோர் அஞ்சலி !
-ஹாஜி மு.ஹிதாயத்துல்லாஹ்
இளையான்குடி
அய்லனே…!
கடலோரம் ஒதுங்கிய
மாணிக்கப் புதையலே…!
மெளனித்த வண்ணமாய்
கரையின் காதுகளில்
என்ன சொல்கிறாய்?
உன் ஏக்கத்தையா? அல்லது
உன் சாவுக்குக் காரணமானவனின்
அயோக்கியத்தனத்தையா?
கடல்நீர் உன்னை நனைத்து
அஞ்சலி செய்கிறதோ?
இதோ… உன் பிரிவுக்காக
நானும் என் எழுதுகோலும்
சோகத்தில் … நனைகிறோம் !
அழுகிறோம் !
ஆம் ! இது
கத்திபடாத… காயம்
இரத்தம் வராத… சோகம் !
அய்லனே !
அநீதியால் சாய்க்கப்பட்ட
அருகம்புல் செடி நீ !
உன்னைக் கொன்றதன் மூலம்
உன் கனவை, கற்பனையைப்
புன்னகையைக் கொன்றிருக்கின்றார்கள் !
பிணமாய் உன்னைப்
பார்த்த பிறகாவது
அந்தப் பொல்லாத வெறியர்கள்
மனிதநேயத்தை… உணர்வார்களா?
உணர வேண்டும் என்பது
உலக ஒற்றைநாவின் குரல் !
( இனிய திசைகள் – அக்டோபர் 2015 )