அம்மாக்கள் இறவாத வானமெங்கே…….

Vinkmag ad

யதாக வயதாக
வருகிறதந்த பயம்
என்னம்மா பற்றியந்த பயம்;

மரணத்தைக் கண்டு
முதலில் அஞ்சவைப்பவள்
அவள் தான் என் அம்மா மட்டும் தான்;

அம்மாக்கள் இறக்கையில்
நண்பர்கள் அழுகையில்
அம்மாவைதான் முதலில் நினைத்தழுகிறேன் நான்;

இரவில் நனைந்த என் தலையணை
எனதம்மாவின் நினைவைத் தான்
நிறையச் சுமந்திருக்கிறது;

நிலாச்சோறு நாட்களின்
இனிமையைப் போலவே
அம்மா இல்லாத நொடிகளும் கொடுமையானது;

வெறும் அழைக்கவும்
அழைக்கையில் இருக்கேன்பா என்று
சொல்லவும் மட்டுமேனும் அம்மா வேண்டும்;

அம்மாவை அழைத்த நாளும்
அவள் என்னோடு பேசியிருக்கும் பொழுதுமே
என் உயிருள்ள பொழுதாகும்..

அவளில்லாத பொழுதை எண்ணும்
நொடியில் மட்டுமே
எனக்கு வாழ்க்கை அப்படி வலிக்கிறது;

அம்மா இல்லாத பிள்ளைகள்
பாவம்
முள்ளில் நடப்பவர்கள் அவர்கள்;

மறுசட்டை எடுக்கவும்
ஒருவேளைப் பட்டினிக்கு வருந்தவும்
அம்மாப் போல் உலகில் யார் வருவா ?

முகத்தில் சிரிப்புடுத்தி
மஞ்சளாய் சிரிக்கும் நிலவு
வராதஇருளில் வரும் பகல் வெண்மையற்றது;

அம்மாவிற்காக நான்
தினம் தினம் நிறைய அழுகிறேன்
நிறைய சேமிக்கிறேன் நாட்களை; ஆனாலும்

சுகர் என்றும் பிரசர் என்றும் சொல்லிக்கேட்கையில்
அம்மாயென்றும் ஒரு மனசு பதறுவதை
கடவுள் புரிவாரா தெரியாது;

புரிவாரெனில் மட்டும் விடியட்டும்
எனக்கான காலை..
——————————————————————————————
வித்யாசாகர்

News

Read Previous

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.தேர்வு முடிவு

Read Next

நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *