அன்றே கொல்வான்
அன்றே கொல்வான்
————————-
ஸ்டெர்லைட் போராட்டத்தால்
ஸ்தம்பித்தது முத்து நகர்
இஸ்டப்பட்டா கேட்டோம் நாங்கள்
இதை எங்கள் மீது திணித்த அரசே
மஹாராஷ்டிரம் மாட்டேன் என்றது
குஜராத் குடியமர்த்த மறுத்தது
கோவா கோபத்தில் விரட்டியது
தமிழகத்தை தாரைவார்த்தது ஏனோ
தாமிரம் தயாரிக்கிறேன் என்று
தாமிரபரணியை காவு கொண்டாய்
தமிழக வளம் பல சுரண்டி சுரண்டி
தனி முதலாளி வாழ வழி செய்தாய்
சுவாசிக்கும் காற்று விஷமாய் ஆனது
குடிக்கும் நீர் நஞ்சாய்ப் போனது
நுரையீரலில் நுண்கிருமி நிறம்பியது
ஜீவாதார வாழ்வியல் சிதைந்ததால்
ஜீவ அணுக்களில் புற்று படர்ந்தது
ஒருவன் சுகமாய் எங்கோ வாழ
ஓராயிரம் உயிர் பலி கேட்கும்
தொழிற்சாலை இங்கு தேவையா
தொடரும் துன்பந்தான்வாழ்க்கையா
காக்கிகளின்கட்டவிழ்த்த அராஜகம்
கார்க்கில் போரை நினைவூட்டியது
கதற பதற கலைந்தோடிய சிறாரை
கண்ட இடத்தில் சுட்டது கடமையோ
மனித உயிர் அத்தனை மலிவாஎன்ன
மனிதநேயம் என்னமறந்தாபோயிற்று
எம் தாய்மார் தாலிகளை அறுத்தா
உம் உறவை உயிர் வாழச் செய்வாய்
கருப்பு துணி கண்ணில் கட்டிய நீதி
கருப்பால் தன் எதிர்ப்பை காட்டுதோ
களங்கமில்லா போராட்டத்தில்
காக்கிகளின் வன்முறை நியாயமோ
கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும்
காக்கிகளின் காட்டுமிராண்டித்தன
காட்சிகளை காண கண் கூசுதோ
கடும்தண்டனை தர மனமில்லையோ
நீதி பிறழும் அரசின் பக்கம்
நிற்க மறுக்கும் போராளிகளின்
நீதமான வாழ்வு சரிதம் கேட்டும்
நீதி வழங்க ஏன் மறுத்தாய்
குற்றப்பின்னணியில் வாழும் அரசு
குருதி படிந்த கரங்களால் எங்களில்
குறிப்பிட்டவர்களை கொல்வதற்கு
குறிபார்த்து சுடஉத்தர விட்டதேன்
பிரௌன் முதல் பிற அரசர்கள்
பிணங்களின் மேல் சிம்மாசனம் அமைத்த வரலாறு உலகறியும்
பிணங்கள் இங்கே அரியணை தயாரா
உங்களுக்கும் வரலாறு வேண்டுமே
பொறுத்திருந்து பாருங்கள்
புற்று உங்கள் வீட்டிலும் வளரும்
பெற்ற அத்தனை பணமும் காசும்
அன்று பயனில்லாமல் போகும்
அரசு அன்று கொல்லும் பழமொழி
மனசு நின்று கொல்லும் புதுமொழி
உன்னை தூங்காமல் செய்யும் அது
உன்னை துரத்திதுரத்தி வதைக்கும்
அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்
அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கின்றான்
அவன் அனைத்திலும் ஆற்றல் மிக்கவன்
அவன் பிடி கடுமையானது பிடித்தால்
அடையாளம் ஒன்றும் இல்லாமல்
அழிந்து போவாய் மனிதா நீ
மு. முகமது யூசுப் உடன்குடி