அன்பே ஆருயிரோ
அன்பே ஆருயிரோ
==================
ஆர் எஸ் கலா
இலங்கை
============
தூது விட்டேன்
தூது விட்டேன்
என் இடையை
தொட வந்த
தென்றலை
தடுத்து உன்னிடம்
தூது விட்டேன்
தடுத்த கோபத்தில்
இடை நிறுத்தம்
கண்டதோ நான்
அறியேன் ஆருயிரே…..\
சேதி சொன்னேன்
சேதி சொன்னேன்
செம்பகப் பூ மேலே
அமர்ந்திருந்த
பட்டாம் பூச்சியை
அழைத்து
அதை நான் அணைத்துப்
பிடிக்கையிலே அதன்
வண்ணங்கள் என் விரலில்
ஒட்டியதால் என் எண்ணத்தை
உன்னிடம் கூறாமலே
பறந்து சென்றதோ நான்
அறியேன் ஆருயிரே…….\
தெறிக்கும் வெட்டுக்கிளியை
பிடித்து துடிக்கும் என் இதய
ஒளியைக் காட்டி படக்கெனப் போய்
டக்கனப் பதிலுடன் வா என்றேன்
நான் பிடிக்கையிலே வலித்ததோ
பாதி வழியிலே தங்கி விட்டதே
ஆருயிரே…….\
காற்றுக்கு தலை அசைத்து
வான் மழையில் நீராடி
மேகத்தின் மோகத்தில் புதையுண்டு
தாகத்தில் பனித் துளி அருந்தி
இரவு பூராவும் விழித்திருந்த அல்லியிடம்
அள்ளி விட்டேன் என் மனக் குமுறலை
குளத்தின் ஓரமாக கள்ளக்காதலன்
ரீங்காரம் பாடவே திருப்பிக் கொண்டது
முகத்தை என் ஆருயிரே…….\
வலியோடு என் விழி கலங்கி
படி ஏறும் வேளை
என் வீட்டு செம்வரத்தி என் மனமும்
பெண் மனமும் ஒன்று உன் மன
வலியைக் கூறு என் இதழின் வழியே
என் மணத்துடன் உன் மனக்கவலையும்
கலக்கட்டும் நான் கொண்டு சென்றது
உன் அன்புக்குரியவன் மூக்கு வழியே
இதயத்தில் செலுத்துவேன் என்று
செம்வரத்தி வந்ததா சேதி சொன்னதா
ஆருயிரே ……\
சொல்லி இருக்கும்
சொல்லி இருக்கும்
என்று என் இதழ்
சொல்கின்றது என்னிடம்
சொக்க வைக்கும் உன் சேதி அறியவே
சொக்கி நிட்கின்றேன் நான்
அன்னமே அன்னமே……..\
இத்தனை தூதும்
தடையானதால்
என் காதல் தவிக்குதடி
அன்னமே கண்ணாலன்
கதையை நீ சென்று
வாங்கி வருவாயோ
மங்கை என் மனதை
மங்களமாக மாற்றுவாயோ
மண்ராடிக்கேட்கின்றேன்
மனம் இரங்கி வருவாயோ
அன்னமே என் அன்னமே…..\